For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம்!

மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
08:00 AM Jun 01, 2025 IST | Web Editor
மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம்
Advertisement

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜுன் 1) மதுரையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில், 6,500 பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. தேர்தலை முன்னிறுத்தி நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

பொதுக்குழு கூட்டம் காலை 9 மணியளவில் தொடங்கி நடைபெறுகிறது. மதியத்திற்கு பிறகு கருத்தரங்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வருவபவர்கள் முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் மதுரையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (மே 31) காலை 11.45 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை புறப்பட்டார். தொடர்ந்து, நேற்று (மே 31) மதியம் 1.05 மணியளவில் மதுரை வந்தடைந்தார். அவருக்கு அமைச்சர்கள் பெரியசாமி, நேரு, தங்கம் தென்னரசு, மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் சித்ரா உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு தொண்டர்கள் அளித்த வேஷ்டி, சால்வையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து, அவனியாபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தினார். வழிநெடுகிலும் கூடியிருந்த மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். அவனியாபுரத்தில் இருந்து ஆரப்பாளையம் திருமலை நாயக்கர் சிலை வரை 22 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ நடைபெற்றது. பின்னர், மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு மெஜிரா கோட்ஸ் ஆலை முன் அமைக்கப்பட்ட மதுரை மாநகராட்சியின் முன்னாள் மேயரான முத்துவின் வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் முதலமைச்சருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, ஏ.வ.வேலு, மூர்த்தி, பிடிஆர் மற்றும் மேயர் முத்து குடும்பத்தினர் பங்கேற்றனர். இதனையடுத்து, மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள தனது சகோதரர் மு.க.அழகிரியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement