For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அதிமுக கூட்டணியில் தேமுதிக? – பிரேமலதாவிடம் மாவட்ட செயலாளர்கள் மீண்டும் வலியுறுத்தல்!

02:20 PM Feb 22, 2024 IST | Web Editor
அதிமுக கூட்டணியில் தேமுதிக  – பிரேமலதாவிடம் மாவட்ட செயலாளர்கள் மீண்டும் வலியுறுத்தல்
Advertisement

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற வேண்டும் என பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் பிரேமலதாவிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. முக்கிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை ஏற்கனவே தொடங்கிவிட்டன.

இதனிடையே மறைந்த விஜயகாந்த் கட்சியான தேமுதிக இந்த தேர்தலை எவ்வாறு கையாள போகிறது என கேள்விகள் இருந்த நிலையில் கூட்டணி குறித்த ஆலோசனையை தற்போது உள்ள தேமுதிக பொதுச்செயலாளரான பிரேமலதா தலைமையில் கடந்த 7ஆம் தேதி கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில்,  மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதா விஜயகாந்துக்கு அதிகாரம் வழங்கியது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இந்நிலையில், மாவட்டச் செயலாளர்கள் தங்களது விருப்பங்களை, கடிதங்கள் மூலம் எழுதி கொடுத்தனர். அதில், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற வேண்டும் என பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் பிரேமலதாவிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், பிரேமலதா விஜயகாந்த்தை அதிமுக மூத்த நிர்வாகிகள் நேற்று சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த சந்திப்பு சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் நடைபெற்றதாகவும்,  அதில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாகவும் கூறப்படுகிறது.

தேமுதிகவினர் தங்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என‌ தெரிவித்த நிலையில் அதிமுக தரப்பில் 5 தொகுதிகள் தேமுதிகவிற்கு தருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் அதிமுகவுடன், தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வருகிறது.  அதிமுக மட்டுமின்றி பாஜகவும் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தைக்கு முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தேமுதிக-வினர் ஐந்து பேர் கொண்ட தேர்தல் குழுவை அமைத்து வருவதாகவும் நாளை மறுநாள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுவதற்கு வாய்ப்புகள் உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement