For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருதை பெற்றுக்கொள்ள டெல்லி செல்கிறார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்!

02:55 PM May 05, 2024 IST | Web Editor
விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருதை பெற்றுக்கொள்ள டெல்லி செல்கிறார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
Advertisement

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை பெறுவதற்காக  தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மே 8-ம் தேதி டெல்லி செல்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கெளரவிக்கும் வகையில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கலை, அறிவியல், மருத்துவம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவிக்கப்பட்டது.

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் ஏப்ரல் 22ம் தேதி நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்ளதுறை அமைச்சர் அமிக்க்ஷா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

5 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளையும், 17 பேருக்கு பத்ம பூஷண் விருதுகளையும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.மேலும், 110 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டது. முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு பத்ம விபுஷண் விருது வழங்கப்பட்டது. மேலும், மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள் : நேபாளத்தின் புதிய 100 ரூபாய் நோட்டுகளில் இந்திய பகுதிகள் - வெடித்த பெரும் சர்ச்சை!

இந்நிலையில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம விபூஷன் விருது கொடுக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து,  முறைப்படி எந்த அழைப்பும், அறிவிப்பும் அவருடைய குடும்பத்திற்கு கொடுக்கவில்லை என விஜயகாந்த் குடும்பத்தினர் சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் தங்களுக்கு விருது பெற்றுக் கொள்ள அழைப்பு வந்தததாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

இதையடுத்து, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட உள்ள நிலையில் அந்த விருதை பெறுவதற்காக வரும் 08.05.2024 தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் டெல்லி செல்கிறார். விருதை பெற்றுக் கொண்டு 11.05.2024 அன்று காலை 12 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

Tags :
Advertisement