For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன்!

01:47 PM Mar 31, 2024 IST | Web Editor
ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன்
Advertisement

ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீர் ஆஜராக வேண்டும் என்று மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது.

Advertisement

டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.  தொடர்ந்து,  அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,  இந்த கடத்தலில் திரைப்பட தயாரிப்பாளரும்,  திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் முக்கிய பங்காற்றியது தெரிய வந்தது.

இதையடுத்து, ஜாபர் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புத் துறையினர் (என்.சி.பி.) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தொடர்ந்து, ஜாபக் சாதிக்கின் கூட்டாளியான திருச்சியை சேர்ந்த சதா கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்த நிலையில் ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீர் ஆஜராக வேண்டும் என்று மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது.

அந்த சம்மனில், டெல்லி ஆர்.கே. புரத்தில் உள்ள தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு தலைமையகத்தில் ஏப்.2ம் தேதி காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜாபர் சாதிக் தயாரித்த படத்தை அமீர் இயக்கி இருந்தது குறிப்பிடதக்கது.

Tags :
Advertisement