For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அனைத்துப் பாடப்பிரிவினருக்கும் பாலிடெக்னிக்கில் நேரடி 2ஆம் ஆண்டு சேர்க்கை - தொழில் நுட்பக் கல்வித் துறை அறிவிப்பு!

அனைத்துப் பாடப்பிரிவினரும் பாலிடெக்னிக்கில் நேரடியாக 2ஆம் ஆண்டு சேரலாம் என தொழில் நுட்பக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
08:19 PM May 15, 2025 IST | Web Editor
அனைத்துப் பாடப்பிரிவினரும் பாலிடெக்னிக்கில் நேரடியாக 2ஆம் ஆண்டு சேரலாம் என தொழில் நுட்பக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
அனைத்துப் பாடப்பிரிவினருக்கும் பாலிடெக்னிக்கில் நேரடி 2ஆம் ஆண்டு சேர்க்கை    தொழில் நுட்பக் கல்வித் துறை அறிவிப்பு
Advertisement

பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக 2-ஆம் ஆண்டு சேருவதற்காக லேட்ரல் என்ட்ரி முறை உள்ளது. இதில் கணிதம், இயற்பியல் வேதியியல் உள்ளிட்ட பாடங்களுடன் பிளஸ் 2 முடித்த மாணவா்களும், 10-ஆம் வகுப்பு முடித்துவிட்டு அதன்பின் 2 ஆண்டு ஐடிஐ படித்தவா்கள் விண்ணப்பிக்க முடியும். மேலும் வணிகவியல் உள்ளிட்ட இதர பாடப்பிரிவில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் முதலாம் ஆண்டு சேரும் வகையில் விதிகள் இருந்தது.

Advertisement

இந்த நிலையில் பிளஸ் 2-வில் எந்த பாடப் பிரிவை எடுத்து படித்திருந்தாலும் பாலிடெக்னிக் படிப்பில் நேரடி 2-ஆம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தொழில் நுட்பக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து தொழில் நுட்பக் கல்வித் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் “தொழில் நுட்பக் கல்வி இயக்கக ஆணையரின் அறிவுறுத்தலின்படி, பிளஸ் 2 தேர்வில் வணிகவியல் உள்பட அனைத்து பாடப்பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் 2025-26-ஆம் கல்வியாண்டில், நேரடி இரண்டாம் ஆண்டு பட்டயபடிப்பில் சேர்க்கை செய்து கொள்ள அனைத்து பலவகை தொழில் நுட்பக் கல்லூரி முதல்வர்களுக்கும் அனுமதி வழங்கப்படும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement