மகாகும்பமேளா கூட்ட நெரிசலுக்கு காரணமானர்வகளை போலீசார் கைது செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனரா? - உண்மை என்ன?
This News Fact Checked by ‘PTI’
பிரயாக்ராஜில் சமீபத்தில் நடந்த மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக மூன்று பேரை போலீசார் ஊர்வலமாக அழைத்துச் செல்வதைக் காட்டும் வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. வீடியோவை பதிவிட்ட பயனர்கள் அவர்களை போலீசார் கைது செய்ததாக எழுதியிருந்தனர். இதுகுறித்து பிடிஐ உண்மைச் சரிபார்ப்பு டெஸ்கின் விசாரணையில், இந்த வீடியோ ஒரு விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டது எனவும் அதில் மூன்று பேர் சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோரையும் சித்தரிக்கும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. எனவே தொடர்பில்லாத வீடியோ மகா கும்பமேளா சம்பவத்துடன் தவறாக இணைக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது.
பிப்.4 அன்று யூடியூப்பில் பகிரப்பட்ட வீடியோவில், ஜனவரி 29, 2025 அன்று பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவின் போது நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளை உ.பி. காவல்துறையினர் ஊர்வலமாக அழைத்துச் செல்வதைக் காட்டுகிறது. இடுகைக்கான இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் ஸ்கிரீன்ஷாட் கீழே உள்ளது.
உண்மை சரிபார்ப்பு :
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ தொடர்பாக பிடிஐ டெஸ்க் இன்விட் டூல் தேடலின் மூலம் வைரலான வீடியோவை இயக்கியது. இதன் மூலம் வீடியோவை பல கீஃப்ரேம்களை பிரித்தெடுத்து அதனை கூகுள் லென்ஸ் மூலம் ஒரு கீஃப்ரேமை இயக்கியபோது, பல பயனர்கள் ஒரே வீடியோவை ஒரே மாதிரியான கூற்றுகளுடன் பகிர்ந்துள்ளதை டெஸ்க் கண்டறிந்தது.
இதுபோன்ற இரண்டு இடுகைகளை இங்கே மற்றும் இங்கேயும் காணலாம் , இந்த தேடல் முடிவுகள் 'டிக்கி பாரி' என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ கிடைத்தது. வைரல் இடுகையில் காணப்பட்ட அதே உடையை அணிந்த மூன்று பேர் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும், இந்த வீடியோவில், நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பு குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோரின் கதாபாத்திரங்களை சித்தரிப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். "ராஜ்குரு, பகத் சிங் மற்றும் சுக்தேவ் ஆகியோரின் தியாகங்களை மக்களுக்கு நினைவூட்டுவதற்காக மகா கும்ப மேளத்தில் கங்கைக் கரையில் நாங்கள் நடந்து செல்கிறோம்," என்று அந்தக் கதாபாத்திரத்தை சித்தரித்தவர்களில் ஒருவர் கூறினார்.
இந்த வீடியோவின் இணைப்பு , அதன் ஸ்கிரீன்ஷாட்டுடன் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. வைரல் வீடியோவில் காணப்பட்டவர்கள் யூடியூப் வீடியோவில் உள்ளவர்களைப் போலவே இருந்ததைக் காட்டும் ஒப்பீட்டுப் படம் கீழே உள்ளது.
மேலும் தேடியதில் கிடைத்த தகவல்களின்படி குறிப்பிட்ட யூடியூப் சேனல் வெளியிட்ட இரண்டு வீடியோக்களையும் டெஸ்கிற்கு கிடைத்தது. இந்த வீடியோக்களிலும், இந்திய சுதந்திர போராட்ட வீரர்களான ராஜ்குரு, பகத் சிங் மற்றும் சுக்தேவ் ஆகியோரின் பங்களிப்புகளை மக்களுக்கு நினைவூட்டுவதற்காக, தாங்கள் அவர்களைப் போல உடையணிந்ததாகக் கூறினர்.
இரண்டு காணொளிகளையும் இங்கேயும் இங்கேயும் காணலாம் . விசாரணையின் அடுத்த பகுதியில், யூடியூப் சேனல் வெளியிட்ட மேலே குறிப்பிடப்பட்ட மூன்று காணொலிகளை டெஸ்க் கவனமாக ஆராய்ந்தது. இந்த காணொலிகள் ஜனவரி 21, ஜனவரி 22 மற்றும் ஜனவரி 24 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்டவை என்பது கண்டறியப்பட்டது, இவை அனைத்தும் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த நாளுக்கு முந்தையவை என்பது குறிப்பிடத்தக்கது விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தயாரிக்கப்பட்ட ஒரு காணொலி மகா கும்பமேளா கூட்ட நெரிசல் சம்பவத்துடன் தவறாக இணைக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
முடிவு:
ஜனவரி 29 ஆம் தேதி பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளா கூட்ட நெரிசலுக்கு காரணமான மூன்று குற்றவாளிகளை போலீசார் ஊர்வலமாக அழைத்துச் சென்றதாக சமூக வலைதளங்களில் ஒரு காணொலி வைரலானது. இது தொடர்பான விசாரணையில், இந்த காணொளி உண்மையில் தயாரிக்கப்பட்டது என்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோரை தியாகங்களை எடுத்துக்கூறும் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும் என்றும் டெஸ்க் கண்டறிந்தது.
Note : This story was originally published by ‘PTI’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.