தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினார்களா? - வைரலாகும் படம் உண்மையா?
This News Fact Checked by ‘The Quint’
'அனைத்து இந்தியர்களும் சகோதர சகோதரிகள். வடக்கு மற்றும் தெற்கு என்கிற பேதத்தை நிறுத்துங்கள், #GetOutStalin' - என்கிற பதாகையை ஏந்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைக் குறிக்கும் வாசகம் கொண்ட பலகையை பள்ளி குழந்தைகள் ஏந்தி நிற்பதாகக் கூறப்படும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இது உண்மையா?:
இல்லை, இந்தப் படம் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இது Xதளத்தின் சொந்தமான Grok AI ஐ பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கலாம்.
உண்மையை எப்படிக் கண்டுபிடித்தோம்?: முதலில், வைரலான புகைப்படத்தைப் பற்றிய சில விவரங்களைக் கவனித்தோம்.
- ஒரு பெண்ணின் கை அந்த அடையாளத்தின் வழியாகச் செல்வது போல் தெரிகிறது, மற்றொரு பெண்ணின் கையில் ஆறு விரல்கள் உள்ளன.
- இந்த விவரங்கள், X இன் AI கருவியான 'Grok' என்ற வாட்டர்மார்க்குடன் இடம்பெற்றிருந்ததால் படம் AI-உருவாக்கிய ஒன்று என்பதைக் காட்டியது.
- இதை உறுதிப்படுத்த, படத்தை SightEngine மற்றும் Hive Moderation கருவிகளின் வழியே ஆய்வு செய்தோம்
- சைட்எங்கினின் பகுப்பாய்வு, அந்தப் படம் உண்மையானது அல்ல, மாறாக AI-உருவாக்கிய ஒன்று என்பதை 99 சதவீத உறுதியைக் காட்டியது.
- இதேபோல், ஹைவ் மாடரேஷனின் கருவி, AI கருவிகளைப் பயன்படுத்தி படம் உருவாக்கப்பட்டது என்பதை 96.9 சதவீத உறுதியைக் காட்டியது.
முடிவு:
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்துவதைக் காட்டுவதாகக் கூறும் வகையில், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட படம் பகிரப்படுகிறது என்பது இதன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
Note : This story was originally published by ‘The Quint’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.