2047ல் தான் நாடு சுதந்திரமடையும் என மக்களவையில் பிரதமர் மோடி பேசினாரா? - உண்மை என்ன?
This News Fact Checked by ‘Vishvas News’
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளை குறிவைத்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பிரதமர் தனது நாடாளுமன்ற உரையின் போது, 2047 ஆம் ஆண்டு நாடு 'சுதந்திரம்' அடைந்ததாக குறிப்பிட்டதாகக் கூறும் அவரது உரையின் காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இதுகுறித்து விஸ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் இந்தக் கூற்று தவறானது என்றும், அதனுடன் வைரலாகும் வீடியோ கிளிப் திருத்தப்பட்டது என்றும் கண்டறிந்துள்ளது. மக்களவை சபாநாயகர் உரையாற்றும் பிறகு பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் மக்கள்தொகை, ஜனநாயகம் மற்றும் தேவை ஆகிய மூன்றும் உள்ளன என்றும், எனவே நம்மால் எதனையும் சாதிக்க முடியும் என்றும் கூறியிருந்தார். மேலும் 2047 இல்தான் நாடு முழுமையான சுதந்திரம் அடையும் சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் ஆகும்போது, நாம் ஒரு வளர்ந்த இந்தியாவாக மாறுவோம் அதுதான் முழுமையான சுதந்திரம் என்று கூறினார்.
வைரலான கூற்று :
சமூக ஊடக பயனர் 'மாஃபிசுல் இஸ்லாம்' வைரலான வீடியோ கிளிப்பைப் பகிர்ந்து, "முட்டாள்களின் தலைவர்: 2047 இல் தான் நாடு சுதந்திரம் பெற்றது” என்று எழுதினார். இந்த திருத்தப்பட்ட வீடியோ கிளிப் பீகார் இளைஞர் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ x தளம் உட்பட பல சமூக ஊடக பயனர்களால் பகிரப்பட்டுள்ளது.
मोदी जी, यह देश 1947 में ही आज़ाद हो गया था
आपके पुरखों के माफीनामें लिखने और मुखबिरी करने के बावजूद
कांग्रेस ने इस देश को बलिदान देकर आज़ादी दिलाई है
यह भूलिएगा मत pic.twitter.com/3FRJB030Pq
— Bihar Youth Congress (@IYCBihar) February 4, 2025
உண்மை சரிபார்ப்பு :
சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வைரல் வீடியோ கிளிப் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரைப் பற்றியது, அதில் பிரதமர் நரேந்திர மோடி, ” நாமும்… 2047 இல் முழுமையான சுதந்திரம் பெறுவோம்” என சொல்வதைக் கேட்கலாம். இந்தக் காணொலி அசல் உரையின் திருத்தப்பட்ட காணொலி என்பது தெளிவாகிறது, இதில் முழு அறிக்கையின் தொகுப்பாகவும் அவை இல்லை.
இந்த வைரல் காணொலி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பதிலில் இருந்து எடுக்கப்பட்டது. பிப்ரவரி 4 ஆம் தேதி நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது அவையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகள் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார், மேலும் அவரது உரை நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் உட்பட பல செய்தி அறிக்கைகளில் கிடைக்கிறது.
மொத்தம் 1.35.25 வினாடிகள் கொண்ட காணொலியில், பிரதமர் நரேந்திர மோடியின் உரையை 1.32.14 வினாடிகளில் இருந்து கேட்பதன் மூலம், வைரலான இந்த காணொலியை காண முடிகிறது.
அவர் ஆற்றிய உரையில் “வளர்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்க நாடு முன்னேறி வருகிறது, மேலும் மிகுந்த நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. வளர்ந்த இந்தியா என்ற கனவு அரசாங்கத்தின் கனவு மட்டுமல்ல. இது 140 கோடி நாட்டு மக்களின் கனவு, இப்போது அனைவரும் இந்தக் கனவுக்கு தங்களால் இயன்ற அளவு சக்தியைக் கொடுக்க வேண்டும். இதற்கு உலக அளவில் உதாரணங்கள் உள்ளன, 20-25 ஆண்டுகளில் உலகின் பல நாடுகள் வளர்ச்சியடைந்ததன் மூலம் தங்களைக் நிரூபித்துள்ளன. எனவே இந்தியாவுக்கு மகத்தான ஆற்றல் உள்ளது.
நமக்கு மக்கள்தொகை, ஜனநாயகம், தேவை என எல்லாமே இருக்கிறது, ஏன் நம்மால் அதைச் செய்ய முடியாது? இந்த நம்பிக்கையுடன் நாம் முன்னேற வேண்டும், மேலும் 2047 ஆம் ஆண்டுக்குள் நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும், அதற்குள் நாம் வளர்ந்த இந்தியாவாக மாறுவோம் என்ற கனவோடு நாம் முன்னேறிச் செல்கிறோம்.
இருப்பினும், வைரல் கிளிப்பில் "...2047 இல் நாடு சுதந்திரம் பெறுமா?" என்ற அறிக்கை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது, இது முழுமையடையாது. பிரதமர் மோடியின் ஆங்கில உரையின் அசல் மற்றும் மொழிபெயர்ப்பு பிரதிகள் இரண்டும் pmindia.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கின்றன , அங்கு அவரது உரையைப் படிக்கலாம்.
பிரதமரின் இந்த உரையை வேறு பல காணொளி அறிக்கைகளிலும் காணலாம், கேட்கலாம்.
வைரலாகும் இந்த காணொளி குறித்து நாடாளுமன்ற செய்தி சேகரிக்கும் பிடிஐ-பாஷா பத்திரிகையாளர் தீபக் ரஞ்சனை நாங்கள் தொடர்பு கொண்டோம். அவர் அந்த வீடியோ கிளிப்பை போலியானது என்றும் திருத்தப்பட்டது என்றும் விவரித்தார்.
முடிவு:
பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, 2047 ஆம் ஆண்டு நாடு 'சுதந்திரமடையும்' என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதாகக் வைரல் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இவை திருத்தப்பட்டது மற்றும் போலியானது, மேலும் இது அரசியல் பிரச்சாரத்திற்காக பகிரப்படுகிறது. 2047 ஆம் ஆண்டு நாட்டின் சுதந்திரத்தின் 100 ஆண்டுகள் நிறைவடைந்த சூழலில் பிரதமர் தொடர்புடைய அறிக்கையை வழங்கியிருந்தார், ஆனால் இந்த சூழல் வைரலான காணொளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
Note : This story was originally published by ‘Vishvas News’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.