Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கேரளாவில் பாஜகவுக்கு 3 இடங்கள் கிடைக்கும் என்ற கருத்துக்கணிப்பை அமைச்சர் ஈ.பி.ஜெயராஜன் ஏற்றுக்கொண்டாரா? உண்மை என்ன?

04:42 PM Jun 03, 2024 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by ‘India Today’

Advertisement

பாஜகவுக்கு 3 இடங்கள் கிடைக்கும் என்ற கருத்துக்கணிப்பை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கேரள அமைச்சர் ஈபி ஜெயராஜன் ஏற்றுக்கொண்டாதாக பரவி வரும் தகவல் போலியானது என்பது அமபலமாகியுள்ளது.

கேரளாவில் பாஜகவுக்கு 3 இடங்கள் கிடைக்கும் என்று வெளியான கருத்துக்கணிப்புகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஈ.பி.ஜெயராஜன் ஏற்றுக்கொண்டது போல் பதிவொன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  அதில்,  திருச்சூர், திருவனந்தபுரம்,  அடிங்கல் தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்றும்,  கருத்துக்கணிப்புகள் தவறாக இருக்க வாய்ப்பில்லை என்றும் ஈ.பி.ஜெயராஜன் கூறியதாக ஏசியாநெட் நியூஸ் செய்தி வடிவில் இந்தப் பதிவு இருந்தது.

"பாஜகவுக்கு 3 இடங்கள் கிடைக்கும் என்று தோழர் ஜெயராஜன் கூறுகிறார் முகநூல் பதிவின் முழு வடிவத்தை கீழே காணலாம் .

இருப்பினும்,  இந்தியா டுடே நடத்திய விசாரணையில்,  பரவும் பதிவுகள் தவறானவை என்று கண்டறியப்பட்டது.  ஏசியாநெட் நியூஸ் அத்தகைய செய்தியை வெளியிடவில்லை.

விசாரணை:

வைரலான செய்தி அட்டைகள் ஏசியாநெட் நியூஸ் பயன்படுத்தும் எழுத்துருக்கள் அல்ல. எனவே,  கார்டு திருத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.  பின்னர் ஏசியாநெட்டின் ஃபேஸ்புக் பக்கத்தை சோதித்த போதும் அதுபோன்ற செய்தி அட்டை எதுவும் கிடைக்கவில்லை.  ஏசியாநெட் ஆன்லைனை தொடர்பு கொண்டபோது,  ​​பரவிய செய்தி அட்டை போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது.

ஈ.பி.ஜெயராஜனின் பதில் தொடர்பாக ஏசியாநெட்டின் செய்தியையும் சரிபார்த்தோம். விரிவான தேடுதலுக்குப் பிறகு,  இதேபோன்ற பின்னணியில் ஈ.பி.ஜெயராஜனின் படத்துடன் ஏசியாநெட் பகிர்ந்த மற்றொரு பதிவு கிடைத்தது.  அதில், முஸ்லீம் லீக் தனித்து போட்டியிடுவது குறித்து பிப்ரவரி 14, 2024 அன்று ஈ.பி.ஜெயராஜன் அளித்த பதிலில், ' லீக் தனித்து போட்டியிட்டால்,  காங்கிரசுக்கு சீர்குலைவு ஏற்படும்' எனக் கூறியதை, எடிட் செய்து தற்போது பகிர்ந்திருப்பது தெரியவந்தது.

அசல் ஃபேஸ்புக் பதிவை கீழே காணலாம்.

இதற்கிடையில்,  எக்ஸிட் போல் சர்வே தொடர்பான ஈ.பி.ஜெயராஜனின் பதிலையும் நாங்கள் சரிபார்த்தோம்.  அதில், கருத்துக் கணிப்புகள் சந்தேகத்திற்குரியவை என்றும், கேரளாவில் பாஜக தனது வெற்றி கணக்கை தொடங்காது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.  இது தொடர்பான செய்தியை ஏசியாநெட் நியூஸ் வெளியிட்டுள்ளது. அதில்,  எக்சிட் போல்களை தயாரித்தவர்கள் அரசியல் நோக்கம் கொண்டவர்கள் என்றும், பாஜகவும் மோடியும் கூறியது போலவே முடிவுகள் வெளிவந்ததாகவும் ஈ.பி.ஜெயராஜன் கூறியதாக ஏசியாநெட் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெயராஜன் ஆசியநெட்டுக்கு அளித்த பதிலை கீழே காணலாம்.

ஈ.பி.ஜெயராஜனின் பதிலை  மற்ற ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.  கேரளாவில் பாஜக தனது வெற்றி கணக்கை தொடங்கும் என்று வெளியான தகவலை நிராகரித்து எல்டிஎஃப் மற்றும் யுடிஎஃப் தலைவர்கள் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில்,  இடது ஜனநாயக முன்னணி ஈ.பி.ஜெயராஜன் பெயரில் பரவி வரும் செய்தி அட்டை போலியானது என்பது உறுதியானது.

உண்மை சோதனை:

வாதம்:
பாஜகவுக்கு 3 இடங்கள் கிடைக்கும் என்ற கருத்துக்கணிப்பை ஈ.பி.ஜெயராஜன் ஏற்றுக்கொண்டார் என ஏசியாநெட் நியூஸ் வெளியானது.

முடிவுரை:
வைரலான செய்தி அட்டை திருத்தப்பட்டது.  ஏசியாநெட் நியூஸ் அத்தகைய செய்தியை வெளியிடவில்லை.

Note : This story was originally published by ‘India Today’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
AtingalBJPCongressEP Jayarajanexit pollsinvestigationKeralaLDFMisleadingMuslim Leaguenews7 tamilNews7 Tamil UpdatesthiruvananthapuramThrissur
Advertisement
Next Article