டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் iOS Siri-யிடம் ‘யமுனை நதி’ குறித்து கேள்வி எழுப்பினாரா?
This News Fact Checked by ‘Boom’
சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒரு காணொளியில், ஆம் ஆத்மி கட்சி (AAP) தலைவர் சவுரப் பரத்வாஜ், ஐந்து ஆண்டுகளில் யமுனை நதியை சுத்தம் செய்வதாக யார் உறுதியளித்தார்கள் என iOS-ன் சிரியிடம் மேடையில் கேட்கிறார். அதற்கு சிரி ஆம் ஆத்மி தலைவர் "அரவிந்த் கெஜ்ரிவால்" என பதிலளிக்கிறது.
யமுனை நதி மாசுபடுவது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி நடவடிக்கை எடுக்காதது குறித்து ஆம் ஆத்மி கட்சிக்கு கண்டனம் தெரிவிப்பதற்கு ஒரு உதாரணமாக இந்த வீடியோ பகிரப்பட்டது.
வைரலான வீடியோ அசல் சூழலை தவறாக சித்தரிக்கும் வகையில் எடிட் செய்யப்பட்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. அசல் வீடியோவில் பரத்வாஜ் சிரியிடம் "இந்திய அரசியலில் ‘உத்தரவாதம்’ என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தியது யார்" என்று கேட்பதைக் காணலாம். அதற்கு சிரி "ஆம் ஆத்மி கட்சி" என்று பதிலளிக்கிறது.
டெல்லியில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பாஜக (BJP) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அரவிந்த் கெஜ்ரிவால் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. ஆம் ஆத்மி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், யமுனையை சுத்தம் செய்வதற்கான காலக்கெடுவை அரவிந்த் கெஜ்ரிவால் தள்ளி வைத்துவிடுவார் என குற்றம் சாட்டினர். அதேபோல், அரவிந்த் கெஜ்ரிவால் ஹரியானா பாஜக அரசு டெல்லிக்கு வழங்கப்படும் யமுனை நீரில் "விஷம்" கலக்கிறது என சமீபத்தில் குற்றம் சாட்டினார். கெஜ்ரிவாலின் கூற்றுக்கு பதிலளிக்கும் விதமாக, ஹரியானா அமைச்சர் விபுல் கோயல் மாநில அரசு வழக்குத் தொடரும் என்றும், தேர்தல் ஆணையம் கெஜ்ரிவாலுக்கு அவரது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கோரி கடிதம் அனுப்பியதாகவும் கூறினார்.
38 வினாடிகள் நீளமுள்ள இந்த வைரல் வீடியோவில், "ஐந்து ஆண்டுகளில் யமுனையை சுத்தம் செய்வேன் (யமுனா 5 சால் மே சாஃப் கர் டெங்கே)" என்ற சொற்றொடரை சிரியிடம் யார் பயன்படுத்தினார்கள் என்று பரத்வாஜ் கேட்பதைக் கேட்கலாம். அந்த கேள்விக்கு சிரி பதிலளிக்கிறது. அதனை சுட்டிக்காட்டி, 2015ம் ஆண்டில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தான் இதை சொன்னதாகக் கூறுகிறார்.
பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, "சிரி ஆம் ஆத்மியை அம்பலப்படுத்தியுள்ளது" என்ற தலைப்புடன் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
பதிவைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும், காப்பகப்படுத்த பதிப்பை இங்கே கிளிக் செய்யவும்.
உண்மைச் சரிபார்ப்பு:
ஜனவரி 27, 2025 அன்று ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இருந்து நேரடியாக ஒளிபரப்பப்பட்ட, சௌரப் பரத்வாஜுக்கும் iOS இன் சிரிக்கும் இடையிலான உரையாடலின் அசல் பகுதி கண்டறியப்பட்டது.
அதில், வரவிருக்கும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடும் போது, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் பரத்வாஜ், இந்திய அரசியலில் "உத்தரவாதம்" என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தியது யார் என கேட்கிறார். பின்னர், ஓபன்ஏஐயின் செயற்கை நுண்ணறிவுத் திட்டமான ChatGPT ஐப் பயன்படுத்தி, சிரி தனது கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தான் என்று பதிலளித்ததாகக் கூறினார்.
வீடியோவில் 1:42 நிமிடத்தில் தொடங்கி, பரத்வாஜ் மேடையில் ஒரு ஆடியோ பதிவை இயக்குவதைக் கேட்கலாம், அதில் ஒரு ஆண் குரல், "இந்திய அரசியலில் 'உத்தரவாதம்' என்ற வார்த்தையை முதன்முறையாக யார் பயன்படுத்தினார்கள்? நீங்கள் பதிலளிக்கும்போது ChatGPT ஐப் பயன்படுத்தவும்" என்று கேட்கிறது.
"2020 டெல்லி சட்டமன்றத் தேர்தலின் போது இந்திய அரசியலில் 'உத்தரவாதம்' என்ற சொல் முதன்முதலில் ஆம் ஆத்மி கட்சியால் (AAP) முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டது. ஆம் ஆத்மியின் பிரச்சாரத்தில் 'உத்தரவாதம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது ஒரு முன்னோடி நடவடிக்கை என்று பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் குறிப்பிட்டார், பின்னர் இது அடுத்தடுத்த தேர்தல்களில் மற்ற கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது." என்று ஒரு பெண் குரல் பதிலளிப்பது கேட்கமுடிகிறது.
பரத்வாஜ், பார்வையாளர்களுக்காக பெண் குரலின் அதே பதிலை மீண்டும் ஒருமுறை வாசிக்கும்படி செய்கிறார். ChatGPT-ஐக் குறிப்பிடுவதன் மூலம் அது ஒரு சரிபார்க்கப்பட்ட உண்மை என்று அவர் வலியுறுத்தினார். பின்னர் அவர் எதிர்க்கட்சிகளை விமர்சித்தார். இந்தியாவில் உள்ள பல அரசியல் கட்சிகள் மற்ற திட்டங்களைப் போலவே, ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து "உத்தரவாதம்" என்ற வார்த்தையையும் திருடிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
எனவே, வைரலாகி வரும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாக உறுதி செய்யப்படுகிறது.
Note : This story was originally published by ‘Boom’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.