For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

யாழ்ப்பாணத்தில் உருவாகிய ’தீப்பந்தம்’ திரைப்படம் - தமிழ்நாட்டில் அறிமுகம்!

யாழ்ப்பாணத்தில் உருவாகிய ’தீப்பந்தம்’ திரைப்படம் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
04:24 PM Jun 12, 2025 IST | Web Editor
யாழ்ப்பாணத்தில் உருவாகிய ’தீப்பந்தம்’ திரைப்படம் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உருவாகிய ’தீப்பந்தம்’ திரைப்படம்    தமிழ்நாட்டில் அறிமுகம்
Advertisement

தமிழ்சினிமாவில் இலங்கை சம்பந்தப்பட்ட பல கதைகள் வந்துள்ளன. பல இலங்கை தமிழர் கேரக்டர்கள் வந்துள்ளன. சில தமிழ் படங்கள் இலங்கையில் படமாக்கப்பட்டுள்ளன. இலங்கை தமிழர்கள் பலர் தமிழ்சினிமாவிலும் தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளனர். அதேசமயம் இலங்கையில் அங்குள்ள தமிழர்களால் அங்கேயே பல தமிழ் படங்கள் எடுக்கப்படுகின்றன. உலகம் முழுக்க அந்த படங்கள் திரையிடப்படுகின்றன.

Advertisement

அந்தவரிசையில் உருவாகி இருக்கும் படம் தீப்பந்தம். ராஜ் சிவராஜ் இயக்கத்தில், தமிழருவி சிவகுமார், ஏழுமலைப்பிள்ளை மதிசுதா உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். கதையை பூவன் மதீசன் எழுதியிருக்கிறார். ராஜ் சிவராஜ், பூவன் மதீசன், அருண் யோகதாசன் ஆகியோர் திரைக்கதை அமைத்துள்ளனர்.
பூவன் மதீசன் இசையும் அமைத்துள்ளார். இந்த படம் முழுக்க யாழ்ப்பாணம் சுற்றியுள்ள இடங்களில் அங்குள்ள நடிகர்களை வைத்தே படமாக்கப்பட்டுள்ளது.

கதைப்படி, நுாலகராக இருக்கும் ஒரு பெரியவர் ஒருவர் தமிழின் தொன்மையை, படைப்புகளை, நுால்களை பாதுகாக்க நினைக்கிறார். அவருக்கு என்ன பிரச்னை வருகிறது. என்ன நடந்தது என்பது கதை. காதல், காமெடி, எமோஷனல், திருப்பங்கள் கலந்து பக்கா கமர்ஷியல் படமாக தீப்பந்தம் உருவாகி உள்ளது. சென்னையில் நடந்த விழாவில் தீப்பந்தம் படக்குழுவினர் இந்த படத்தை திரையிட்டு காண்பித்தனர். ஓவியர் மருது, இயக்குனர்கள் அஜயன்பாலா, கவிதாபாரதி உள்ளிட்ட பலர் படம் குறித்து பேசினர்.

யாழ்ப்பாணம் பகுதியில் பெரியவரான குமரன் தனியே வசித்து வருகிறார். அவர் மகன் அமெரிக்காவில் உயர் இடத்தில் இருக்கிறார். நுாலகரான அந்த பெரியவர் அங்கே கல்லுாரியில் படிக்கும் 4 இளைஞர்களை தன் வீட்டில் தங்க வைக்கிறார். அப்போது அவர்கள் செய்த குறும்பால் பிரச்னை ஏற்படுகிறது. பெரியவர் வீடு தாக்கப்படுகிறது. அந்த கோபத்தில் அவர் நால்வரையும் வீட்டை விட்டு துரத்த, மறுநாள் தனது வீட்டு கிணற்றில் பெரியவர் பிணமாக காணப்படுகிறார். அந்த நான்கு இளைஞர்களும் பெரியவர் உடலுக்கு இறுதிசடங்கு செய்கிறார்கள். அப்போது அதில் சில தவறுகள் நடந்துவிட்டது. பெரியவரை வெறுக்கும் சிலரை தலைமுடியை வாங்கி வந்து அந்த வீட்டில் புதைத்தால்தான் அவர் ஆன்மா சாந்தியடையும் இல்லாவிட்டால், இங்கே இன்னொரு உயிர் போகும் என்று பெரியவரின் நண்பர் எச்சரிக்க, நுாலகரான அந்த பெரியவர் யார்? அவர் சாவுக்கு என்ன காரணம் என இளைஞர்கள் ஆராய, பல திருப்பங்கள் நடக்கின்றன. பெரியவரின் காதல், தமிழ்ப்பற்று, துரோகம், இலங்கை நுாலகத்தில் உள்ள தொன்மை வாய்ந்த ஓலை சுவடிகள், புத்தகங்களை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய ஆர்வம், அதற்கு ஏற்படும் தடைகள் என பல விஷயங்கள் விரிகின்றன. இடைவேளைக்கு முன்பு ஒரு கோணம், பின்னர் இன்னொரு கோணம் கதை மாறுகிறது. கிளைமாக்ஸ் விறுவிறு.

ஒரு நுாலகர், 4 இளைஞர்கள் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் என கதை நகர்ந்தாலும், தமிழின் தொன்மையை பாதுகாக்க வேண்டும்.  இன்றைய இளைஞர்களுக்கு பழைமையான தமிழ் புத்தகங்களை, கட்டுரைகளை, பெருமைகளை கொண்டு செல்ல வேண்டும். அது இலங்கையில் எப்படி நடக்கிறது. சந்திக்கும் பிரச்னைகள் என்ன என்பதை காதல், காமெடி, திருப்பங்கள், துரோகம் கலந்து விரிவாக சொல்கிறார் இயக்குனர். படத்தில் இலங்கை ஸ்டைல் பாடல்களும், அந்த நாட்டுக்கே உரிய பழக்கவழக்கங்கள், ஸ்லாங் , வாழ்க்கை முறை பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் சென்சார் ஆன தீப்பந்தம், தமிழ்நாட்டில் முறைப்படி சென்சார் ஆகி வர உள்ளது.

குறிப்பாக, இலங்கையில் கச்சான் அல்வா என்றால் கடலை மிட்டாயை குறிக்கும். அது சம்பந்தப்பட்ட காட்சிகள் அருமை. அங்குள்ள கலாச்சாரம், இலங்கை தமிழர்களின் தமிழ்ப்பற்று, இப்போதைய யாழ்ப்பாணம், அதை சுற்றியுள்ள இடங்கள், அங்குள்ள மனிதர்களின் முகங்கள், குறிப்பாக, அங்கே பேசும் அழகு தமிழ். தீப்பந்தம் மாதிரி நம் தொன்மைகளை, பாராம்பரியத்தை, மொழியின் ஆழத்தை, அறிவை இருட்டில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று சொல்கிற இந்த படக்கரு

- மீனாட்சிசுந்தரம், சிறப்பு செய்தியாளர்

Tags :
Advertisement