For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தவெக தலைவர் விஜயுடன் என்.ஆனந்த் சந்திப்பு?

தவெக தலைவர் விஜயை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
08:53 AM Oct 14, 2025 IST | Web Editor
தவெக தலைவர் விஜயை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் விஜயுடன் என் ஆனந்த் சந்திப்பு
Advertisement

கரூரில் கடந்த  27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தவெக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர். தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோரின் முன்ஜாமின் மனுக்களை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

Advertisement

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில், தலா ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டது. தவெக சார்பில் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.  கரூரில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை வீடியோ கால் மூலம் தொடர்புக்கொண்டு தவெக தலைவர் விஜய் ஆறுதல் கூறியதாக சமீபத்தில் தகவல் வெளியானது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த பிறகு என். ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 17 நாட்களாக தலைமறைவாக இருந்த என்.ஆனந்த் சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜயின் இல்லத்தில், அவரை நேரில் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயுடன் என். ஆனந்த் சுமார் 20 நிமிடம் பேசியதாக சொல்லப்படுகிது.

Tags :
Advertisement