For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அரவிந்த் கெஜ்ரிவாலின் தோல்விக்கு பிறகு பகவந்த் மான் கண்ணீர் விட்டு அழுதாரா? - Fact Check

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தோல்விக்குப் பிறகு பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் அழத் தொடங்கியதாக முதல்வர் பகவந்த் மானின் வீடியோ வைரலானது.
07:51 PM Feb 11, 2025 IST | Web Editor
அரவிந்த் கெஜ்ரிவாலின் தோல்விக்கு பிறகு பகவந்த் மான் கண்ணீர் விட்டு அழுதாரா    fact check
Advertisement

This News Fact Checked by ‘Vishvas News

Advertisement

நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. இது தொடர்பாக, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் வீடியோ கிளிப் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வைரலான வீடியோவில் அவர் உணர்ச்சிவசப்படுவதைக் காணலாம். சில பயனர்கள் இந்த வீடியோ கிளிப்பைப் பகிர்ந்துகொண்டு, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தோல்விக்குப் பிறகு பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் அழத் தொடங்கியதாகக் கூறுகின்றனர்.

இதுகுறித்து விஸ்வாஸ் நியூஸ், தனது விசாரணையில், இந்த வைரல் கூற்று தவறானது என்பதைக் கண்டறிந்துள்ளது. மேலும் இந்த வைரல் காணொலி ஜூலை 2024 இல், மதுபான ஊழல் தொடர்பான வழக்கில் சிறையில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்காக ஜந்தர் மந்தரில் ஒரு பேரணி நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்டது எனவும் கண்டறிந்தது. இந்த வீடியோ திரித்து தற்போது நடந்து முடிந்த தேர்தலுடன் தொடர்புபடுத்தி தவறான கூற்றுகளுடன் பகிர்ந்து வருகின்றனர்.

வைரல் பதிவு :

பேஸ்புக் பயனர் குவாமி யோதா தீப் (இணைப்பு ) பிப்ரவரி 9, 2025 அன்று ஒரு வைரல் பதிவைப் பகிர்ந்து, “பகவந்த் மான் கெஜ்ரிவாலின் தோல்விக்குப் பிறகு அழுகிறார்” என்று எழுதியிருந்தார்.

உண்மை சரிபார்ப்பு :

வைரலான காணொலியை  தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். டைனிக் ஜாக்ரானின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் காணொலி தொடர்பான அறிக்கையை நாங்கள் கண்டோம். ஜூலை 31, 2024 அன்று பதிவேற்றப்பட்ட காணொலியுடன் இணைக்கப்பட்ட தகவலின்படி, “டெல்லி மதுபான ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஆறு மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கைது கண்டித்தும் அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு பேரணி நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் முதல்வர் மான் பேசும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுதார்” என இடம்பெற்றிருந்தது.

மேலும் தேடலில் ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இந்த காணொலியை நாங்கள் கண்டோம் . இந்த காணொளி ஜூலை 30, 2024 அன்று பதிவேற்றப்பட்டது. 15 நிமிடம் 48 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவின் வைரலான வீடியோ பகுதியை 9 நிமிடங்கள் 27 வினாடிகளில் பார்க்கலாம்.

அந்த வீடியோவில், பகவந்த் மான், “ஒரு எல்லை இருக்கிறது… நாம் எங்கு செல்ல வேண்டும், உச்ச நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டுமா? சொல்லுங்கள் செல்வோம். எந்த வழக்கறிஞரைப் பயன்படுத்த வேண்டும், நாம் ஏதாவது தவறு செய்திருந்தால் சொல்லுங்கள், நாம் பள்ளிகளைக் கட்டியிருக்கிறோம், என்ன தவறு, மருத்துவமனைகளைக் கட்டியிருக்கிறோம், என்ன தவறு, நண்பர்களே, மின்சாரத்தை இலவசமாக்கிவிட்டோம்” என பேசியிருந்தார்.

வைரல் காணொளி தொடர்பான கூடுதல் செய்திகளை இங்கே காணலாம் .

மேலும் தகவலுக்கு, டைனிக் ஜாக்ரானில் ஆம் ஆத்மி கட்சி தொடர்பான செய்திகளை சேகரிக்கும் நிருபர் வி கே சுக்லாவைத் தொடர்பு கொண்டோம். அந்த வைரல் கூற்று தவறானது என்று அவர்கள் எங்களிடம் கூறினர். இந்த காணொளி பழையது என்றும் அவர் தெளிபடுத்தினார்.

முடிவு: 

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தோல்விக்குப் பிறகு பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் அழத் தொடங்கியதாக முதல்வர் பகவந்த் மானின் வீடியோ வைரலானது. இதுகுறித்து விஷ்வாஸ் நியூஸ் நடத்திய விசாரணையில் இந்தக் கூற்று தவறானது என்று கண்டறிந்துள்ளது. இந்த காணொலி 2024 ஆம் ஆண்டு டெல்லி ஜந்தர் மந்தரில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக ஒரு பேரணி நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்டது. இது தற்போது தவறான கூற்றுடன் பகிரப்படுகிறது.

Note : This story was originally published by ‘Vishvas News and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement