For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தொடர் கனமழை எதிரொலி : ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1,20,000 கன அடியாக அதிகரிப்பு!

07:58 AM Jul 27, 2024 IST | Web Editor
தொடர் கனமழை எதிரொலி   ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1 20 000 கன அடியாக அதிகரிப்பு
Advertisement

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1,20,000 கன அடியாக அதிகரித்துள்ளது. 

Advertisement

கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், கடந்த 10 நாட்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து கடந்த வாரம் 75,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 74,000 கன அடியாக இருந்தது. தொடர்ந்த மாலை நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 95,000 கன அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி 1,20,000 கன அடியாக உயர உயர்ந்துள்ளது.

இதையும் படியுங்கள் : அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் இன்று 12-வது நாளாத பரிசல் இயக்கவும் அருவிகளில் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்க தடை நீடித்து வருகிறது. மேலும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால், காவிரி கரையோரப் பகுதிகளில், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தருமபுரி மாவட்டத்தில் காவிரி கரையோரம் உள்ள ஒகேனக்கல், ஊட்டமலை, ஆலம்பாடி, நாகமரை, பண்ணவாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அறிவுறுத்தியுள்ளார்.

Tags :
Advertisement