For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விடுமுறை தினம் : திருச்செந்தூர் கோயிலில் 5 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!

02:56 PM Jul 14, 2024 IST | Web Editor
விடுமுறை தினம்   திருச்செந்தூர் கோயிலில் 5 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
Advertisement

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுமார் 5 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலானது, முருகப்பெருமான் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த
பரிகார ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான
பக்தர்கள் இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு
கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.

பூஜைகளைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடினர். இதைத்தொடர்ந்து பொது தரிசன வரிசையில் சுமார் 5 மணி நேரமும், ரூ.100 கட்டண தரிசனத்தில் சுமார் 4 மணி நேரமும் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags :
Advertisement