For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருச்செந்தூர் முருகன் கோயிலில் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!

03:56 PM Jan 07, 2024 IST | Web Editor
திருச்செந்தூர் முருகன் கோயிலில் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
Advertisement

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விடுமுறை தினத்தையொட்டி 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Advertisement

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து வேல் குத்தியும், காவடி எடுத்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவது வழக்கம். அந்த வகையில், கடந்த சில நாட்களாக ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக காவடி எடுத்தும், வேல் குத்தியும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.

மேலும், இன்று (ஜன. 07) விடுமுறை தினம் என்பதால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். கோயிலில் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. இதனைத் தொடர்ந்து, மற்ற காலபூஜைகள் வழக்கம் போல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடலில் புனித நீராடி பொது தரிசனத்தில் சுமார் 5 மணி நேரமும், ரூ.100 கட்டணம்
தரிசனத்தில் சுமார் 3 மணி நேரமும் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி
தரிசனம் செய்து வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கோயில் வளாகம்
திருவிழா போல் காட்சி அளித்தது.

Tags :
Advertisement