For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு - பொதுமக்கள் ஏமாற்றம்!

09:57 PM Dec 31, 2023 IST | Web Editor
மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு   பொதுமக்கள் ஏமாற்றம்
Advertisement

மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Advertisement

சென்னை மெரினா கடற்கரை விடுமுறை நாட்கள் என்றாலே மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் பகுதியாக இருப்பது வழக்கம். அதிலும் வருடத்தின் இறுதி நாளான இன்று புத்தாண்டு கொண்டாட்டமும் சேர்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் மெரினா கடற்கரையில் குவிந்துள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, சென்னை மாநகரில் மொத்தம் 18,000 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுதவிர, 1,500 ஊர்க்காவல் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடற்கரை பகுதிகளில் மது அருந்தக்கூடாது எனவும் அதையும் மீறி, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மெரினா உள்பட முக்கிய கடற்கரையில் மக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ளதால், கடலில் மக்கள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை சாலையில் இரவு 8 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மெரினா கடற்கரையில் குவிந்துள்ள பொதுமக்களை காவல்துறையினர் வெளியேற்றி வருகின்றனர். இதன் காரணனக கடற்கரையில் புத்தாண்டை கொண்டாட வந்தவர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்படுவதால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

மேலும் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி தியாகராய நகர் கடைவீதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் கூடியுள்ளனர். இந்த புத்தாண்டில் வழக்கத்தை விட  பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதாக தியாகராய நகரில் உள்ள கடை உரிமையாளர்கள் கூறியுள்ளனர். மேலும் கடை வீதிகளில் கூட்டம் அதிகமாக உள்ளதால், விருப்பப்பட்ட பொருட்களை வாங்குவது சிரமமாக உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்

Tags :
Advertisement