For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“கட்சி பாகுபாடின்றி கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

கட்சி பாகுபாடின்றி கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
12:45 PM Apr 01, 2025 IST | Web Editor
“கட்சி பாகுபாடின்றி கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்”   முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேச்சு
Advertisement

தமிழக சட்டசபையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று(ஏப்ரல்.01)நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி , அதிமுக சட்டமன்ற உறிப்பினர்கள் கேட்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற சாத்தியமில்லை எனக் கூறுவதா? பள்ளிக்கு கூடுதல் கட்டடம் வேண்டும் என கேட்கும்போது அதற்கு சாத்தியம் இல்லை என எப்படி கூற முடியும். அறிவித்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தான் கேள்வியை முன்வைக்கின்றோம்” என்று கூறினார்.

Advertisement

இபிஎஸ் பேச்சுக்கு அமைச்சர் எ.வ.வேலு,  “சாத்தியக்கூறு இல்லை என்று கூறும் பதிலில் உள்நோக்கம் இல்லை. சட்டமன்ற உறுப்பினர்கள்  கோரிக்கைகளை முறையாக ஆய்வு செய்த பின் சாத்தியக்கூறு உள்ளதா? இல்லையா? என கூறுகிறோம்” என்று பதிலளித்தார்.

இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது,  “இங்கு ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் பத்து பணிகளை வழங்கிட வேண்டும். சாத்தியமான திட்டங்களை நிச்சயமாக நிறைவேற்றுவோம். கட்சி பாகுபாடின்றி கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement