டெல்லி | நான்கு தலைமுறையாக வாழ்ந்த தமிழர்களின் மதராஸி கேம்ப் இடித்து அகற்றம்!
டெல்லி ஜங்புரா-நிஜாமுதீன் பாராபுல்லா வடிகால் பகுதியையொட்டி மதராஸி கேம்ப் குடிசைப்பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் தமிழகர்கள் கிட்டதட்ட நான்கு தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இந்த இடத்தை அங்கீகாரமற்ற குடியிருப்புப் பகுதியாக டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் இப்பகுதியில் ஏற்படும் வெள்ளம், பல்வேறு வளர்ச்சிப் பணிகளை முன்னிட்டு இங்குள்ள குடியிருப்புகளை அகற்றவும் உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்தது.
அந்த பகுதியில் வாழ்ந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டிருந்த போதிலும் 370 குடும்பங்களில் 189 குடும்பங்களுக்கு மட்டுமே மாற்று வசிப்பிடம் வழங்கப்பட்டுள்ளது. 45 கிலோமீட்டர் தொலைவில் வழங்கப்பட்டுள்ள மாற்று இடத்திற்கு இடம்பெயர்ந்தால் வாழ்வாதாரம் முற்றிலும் இழந்து விடுவோம் என அப்பகுதி மக்கள் கூறிவந்தனர். இவர்களுக்கு சிபிஎம், நாதக உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி மதராஸி கேம்ப் குடிசை பகுதிகளை இடிக்கும் பணி தொடங்கியது. இன்று காலை முதல் பலத்த பாதுகாப்புடன் ஜேசிபி வாகனம் மூலம் குடியிறுப்பு பகுதிகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.