For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கோவை மாரியம்மன் கோயிலின் சிலைகள் சேதம் - அண்ணாமலை கண்டனம்!

கோவை மாரியம்மன் கோயிலின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டாதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
05:43 PM Jun 18, 2025 IST | Web Editor
கோவை மாரியம்மன் கோயிலின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டாதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை மாரியம்மன் கோயிலின் சிலைகள் சேதம்   அண்ணாமலை கண்டனம்
Advertisement

கோவை சின்னியம்பாளையம் மாரியம்மன் கோயிலில் சிலைகள் தேதப்படுத்தப்பட்டதாக கூறி சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், “புகழ்பெற்ற கோவை சின்னியம்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவிலில், நேற்று இரவு, சமூக விரோதிகள் புகுந்து, நூற்றாண்டு கால பழமையான சிலைகளை உடைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தப் பகுதி மக்கள் காலங்காலமாய் வணங்கி வரும் அம்மன் ஆலயத்தின் சிலைகளை உடைத்து, சமூகப் பதற்றம் ஏற்படுத்துவதே நோக்கமாகத் தெரிகிறது.

உடனடியாக, கோவில் சிலைகளை உடைத்த சமூக விரோதிகளை கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதையும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்”

இவ்வாறு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement