For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"மோந்தா" புயல் எதிரொலி - 3 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

மோந்தா புயல் காரணமாக சென்னை, எண்ணூர், காட்டுபள்ளி ஆகிய துறைமுகத்தில் 4 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
12:02 PM Oct 28, 2025 IST | Web Editor
மோந்தா புயல் காரணமாக சென்னை, எண்ணூர், காட்டுபள்ளி ஆகிய துறைமுகத்தில் 4 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
 மோந்தா  புயல் எதிரொலி   3 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
Advertisement

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த 26ஆம் தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, “மோந்தா” புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இந்த நிலையில் மோந்தா புயல் இன்று காலை 5.30 மணி நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கே 600 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது.

Advertisement

இது வங்கக்கடலில் மேற்கு-வடமேற்கு நோக்கி தொடர்ந்து நகர்ந்து, ஆந்திர பிரதேசத்தின் மசிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் பகுதிகளுக்கு இடையே இன்று மாலை அல்லது இரவு ஆந்திராவில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கடலூர், தூத்துக்குடி உள்பட தமிழக துறைமுகங்கள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகம் என மொத்தம் 9 துறைமுகங்களில் கடந்த 25-ம் தேதி அன்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

இந்த நிலையில் மோந்தா புயல் காரணமாக சென்னை, எண்ணூர்,காட்டுபள்ளி ஆகிய துறைமுகத்தில் 4 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 6 துறைமுகங்களில் நேற்று ஏற்றப்பட்ட 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு தொடர்ந்து நீடிக்கிறது.

Tags :
Advertisement