For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தீவிர புயலாக வலுப்பெறும் ‘மிக்ஜாம்’ புயல்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...

12:50 PM Dec 03, 2023 IST | Web Editor
தீவிர புயலாக வலுப்பெறும் ‘மிக்ஜாம்’ புயல்    வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Advertisement

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் மிக்ஜாம் புயலானது தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கிமீ வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து, ‘மிக்ஜம்’ புயலாக வலுவடைந்துள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று, வரும் 4-ம் தேதி காலைக்குள் தெற்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் மேற்கு மத்திய வங்கக்கடலை அடையும்.

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் மிக்ஜாம் புயல் ஆனது கடந்த ஆறு மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புதுச்சேரிக்கு கிழக்கு தென் கிழக்கு திசையில் 290 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 290 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும், அதன் பிறகு இது வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி முற்பகல் வேளையில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியை அடையும் என்றும், அதன் பிறகு அது வடக்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை அடைந்து வருகிற டிசம்பர் 5ஆம் தேதி முற்பகல் வேளையில் தெற்கு ஆந்திரா பகுதிகளில் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திற்கு இடையே தீவிர புயலாக கரையைக் கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement