For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உணவில் முடி இருந்ததாக வாடிக்கையாளர் தகராறு... சிசிடிவியை ஆய்வு செய்ததில் நாடகமாடியது அம்பலம்!

09:26 PM Jan 19, 2024 IST | Web Editor
உணவில் முடி இருந்ததாக வாடிக்கையாளர் தகராறு    சிசிடிவியை ஆய்வு செய்ததில் நாடகமாடியது அம்பலம்
Advertisement

சாப்பிட்ட உணவில் முடி இருந்ததாக வாடிக்கையாளர் தகராறு செய்த நிலையில் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில் உணவில் தலைமுடி இருப்பதாக கூறி நாடகம் ஆடியது அம்பலமானது.  

Advertisement

பூந்தமல்லி, லட்சுமிபுரம் சாலையில் வட மாநில இளைஞர்கள்  சேர்ந்து உணவகம் ஒன்றை
நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் இந்த உணவகத்தில் உணவு சாப்பிட வந்த
நபர் ஒருவர் சிக்கன் ரைஸ், சிக்கன் லாலிபாப் ஆகிய உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருந்தார்.

உணவை சாப்பிட்டு முடிக்க இருந்த சிறிது நேரத்தில் உணவக ஊழியரை அழைத்து இந்த உணவில் தலைமுடி இருப்பதாகவும், அதனால் இந்த உணவுக்கு பணம் கொடுக்க மாட்டேன் எனவும் கூறி தகராறு செய்துள்ளார்.   இதனால் உணவக ஊழியர்களும் அவரிடம் பணம் வாங்காமல் அனுப்பி வைத்தனர்.

இதையும் படியுங்கள்:  புது பொலிவுடன் DD தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

இதனைத் தொடர்ந்து ஊழியர்கள் சந்தேகம் அடைந்த நிலையில் கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை  ஆய்வு செய்தனர்.  சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அந்த இளைஞரே தன்னுடைய தலையில் இருந்த முடியை பிடிங்கி உணவில் போட்டு,  உணவில் தலைமுடி இருப்பதாக கூறி நாடகம் ஆடியது அம்பலமானது.

Tags :
Advertisement