For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இரவு உணவிற்குப் பிறகு ஏதாவது சாப்பிட ஆசையா? தூக்கத்தை மேம்படுத்தும் உணவுகள் இதோ!

இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடுவதற்கு சிறந்த உணவுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
07:44 PM May 29, 2025 IST | Web Editor
இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடுவதற்கு சிறந்த உணவுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
இரவு உணவிற்குப் பிறகு ஏதாவது சாப்பிட ஆசையா  தூக்கத்தை மேம்படுத்தும் உணவுகள் இதோ
Advertisement

பெரும்பாலானோர் இரவு உணவிற்கு பிறகு எதையாவது சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். சிலர், டீ, காஃபி போன்றவற்றை அருந்துவர். இன்னும் சிலர் இனிப்பு, காரம் போன்ற சிற்றுண்டிகளை சாப்பிட ஆசைப்படுகின்றனர். இந்த நிலையில், இரவு உணவிற்கு பிறகு சாப்பிட கூடிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து உணவியல் நிபுணர்கள் கூறுவதை இங்கு பார்க்கலாம்.

Advertisement

இரவு உணவிற்கு பிறகு சாப்பிடுவதற்கு சிறந்த உணவுகள் 

1. சூடான மஞ்சள் பால்: மஞ்சளில் (மஞ்சள்) குர்குமின் உள்ளது. இது தூக்கத்தை மேம்படுத்த உதவுகிறது.

2. பாதாம்: பாதாமில் மெக்னீசியம் உள்ளது. இது மன அழுத்த ஹார்மோன்கள் மற்றும் தசை பதற்றத்தைக் குறைக்க உதவும். தூங்குவதற்கு முன் பாதாம் சாப்பிடுவது உடல் மற்றும் மன அழுத்ததை போக்குவதுடன், சிறந்த தூக்க தரத்திற்கு வழிவகுக்கும்.

3. வாழைப்பழம்: வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியத்தின் நிறைந்துள்ளன. இந்த தாதுக்கள் தசைகளை தளர்த்தி நிம்மதியான தூக்கத்திற்கு உதவுகின்றன.

4. தயிர் அல்லது மோர் : புரோபயாடிக்குகளை (புரோபயாடிக்குகள் என்பது குடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களைக் கொண்ட நேரடி நுண்ணுயிரிகள்) உட்கொள்வதற்குப் பதிலாக, தயிர் அல்லது மோரில் இருந்து இயற்கையாகவே அவற்றைப் பெறுவது நல்லது. இந்த பானங்கள் செரிமானத்தை மேம்படுத்தி கால்சியத்தை வழங்குகின்றன.

தவிர்க்க வேண்டிய 3 உணவுகள்

இனிப்பு வகைகள்: பெரும்பாலானவர்கள் இனிப்புகள் சாப்பிடுவதை விரும்புகின்றனர். ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பிறகும் ஏதாவது ஒரு இனிப்பு வகையைச் சாப்பிட ஆசைப்படுகிறார்கள். இரவு உணவிற்குப் பிறகு இதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிக சர்க்கரை அளவு தூக்கத்தைக் கெடுத்து ரத்த குளுக்கோஸை அதிகரிக்கும்.

வறுத்த சிற்றுண்டிகள்: இரவு உணவில் வறுத்த, எண்ணெய் நிறைந்த உணவுகளைச் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், இரவு உணவிற்குப் பிறகு அதைச் சேர்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது அஜீரணம் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.

காரமான உணவுகள்: இரவு உணவிற்குப் பிறகு காரமான உணவுகளை சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் ஏற்படுவதுடன் தூங்குவதில் தொந்தரவு ஏற்படுகிறது.

Tags :
Advertisement