For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இளைஞரை துண்டு துண்டாக வெட்டி, சமைத்து சாப்பிட்டதாக கூறப்படும் நாட்டு வைத்தியர் - அதிர்ச்சி பின்னணி!

05:04 PM Nov 25, 2023 IST | Web Editor
இளைஞரை துண்டு துண்டாக வெட்டி  சமைத்து சாப்பிட்டதாக கூறப்படும் நாட்டு வைத்தியர்    அதிர்ச்சி பின்னணி
Advertisement

இளைஞரை துண்டு துண்டாக வெட்டி,  அதை சமைத்து சாப்பிட்டதாக கூறப்படும் நாட்டு வைத்தியர் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Advertisement

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே சோழபுரத்தை சேர்ந்த நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தி. இவரிடம் மருத்துவம் பார்த்து வந்த அசோக்ராஜ் என்பவர் கடந்த அக்டோபர் மாதம் 13ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதைதொடர்ந்து சோழபுரம் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். இதுதொடர்பாக, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

நண்பர் அசோக்ராஜை கொலை செய்து தனது வீட்டு கொல்லைப்புரத்தில் புதைத்து வைத்துள்ளதாக வாக்குமூலம் அளித்தார் நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தி. சோழபுரம் கீழ வீதியில் உள்ள கேசவமூர்த்தியின் வீட்டிற்கு சென்ற போலீசார், பொக்லைன் உதவியுடன் தோண்டியபோது, அங்கு தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்டு அழுகிய நிலையில் உடல் ஒன்று கிடைத்தது.

நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தியை போலீசார் தீவிரமாக விசாரித்தபோது, அதிர்ச்சியான தகவல்களும், ஆதாரங்களும் கிடைத்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சோழபுரத்தை சேர்ந்த இளைஞர் அனாஸ் என்பவர் காணாமல்போனது குறித்தும் கேசவமூர்த்தியிடம் போலீசார் விசாரித்தனர். அவரையும் கொலை செய்ததாக, கேசவமூர்த்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஒவ்வொருவரையும் கொலை செய்து, அவர்களை துண்டு துண்டாக வெட்டி புதைப்பதற்கு முன்பு மனித உறுப்புகளை சமைத்து ருசி பார்த்ததாக கூறப்படுகிறது. பலருக்கு ஆண்மை மாத்திரைகளையும், இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கேசவமூர்த்தி மீது ‍கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், மீண்டும் கேசவமூர்த்தி வீட்டிற்கு சென்ற போலீசார், அவரது வீட்டின் கொல்லைப்புற பகுதியில் பொக்கலின் இயந்திரத்தை கொண்டு தோண்டினர். அப்போது கிடைத்த தடயங்களை கொண்டு நாட்டு வைத்தியரின் கொடூர கொலைகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தன்னிடம் வைத்தியம் பார்த்த இளைஞர்களை கொடூரமாக கொன்று, மனித உறுப்புகளை சாப்பிட்டதாக கூறப்படும் வைத்தியரின் செயல்பாடுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement