For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அதிகரிக்கும் கொரோனா தொற்று... ஒரே நாளில் இத்தனை இறப்புகளா?

கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
01:17 PM Jun 07, 2025 IST | Web Editor
கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அதிகரிக்கும் கொரோனா தொற்று    ஒரே நாளில் இத்தனை இறப்புகளா
Advertisement

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல உயிர்களை பறித்துச் சென்றது. ஊரடங்கு, தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பரவல் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே, சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. கொரோனா தொற்று தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது.

Advertisement

இதையும் படியுங்கள் : “5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் மூட்டைகள் சேதம்.. திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

இந்த நிலையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன்முலம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5755 ஆக உள்ளது. மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கர்ப்பிணி உள்பட 4 பேர் கொரோனா தொற்று காரணமாக நேற்று உயிரிழந்தனர்.

உயிரிழந்த பெண் 45 வயதுடைய 9 மாத கர்ப்பிணி என்பதும், மற்ற மூவரும், வயது முதுமை மற்றும் இணை நோய்கள் காரணமாக மரணமடைந்ததாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் 194 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம், நாட்டில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 6,000-ஐ நெருங்கியுள்ளது.

Tags :
Advertisement