For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தொடர் மழை - வெள்ளத்தில் மிதக்கும் #TajMahal

06:33 PM Sep 15, 2024 IST | Web Editor
தொடர் மழை   வெள்ளத்தில் மிதக்கும்  tajmahal
Advertisement

உலக அதிசயங்களின்ல் ஒன்றான தாஜ்மஹாலின் வளாகத்தில் உள்ள தோட்டம் மழை வெள்ளத்தில் மூழ்கியது.

Advertisement

ஆக்ராவில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாத மழை பெய்து வருவதால், தாஜ்மஹால் உட்பட நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமும் மழையால் பாதிக்கப்பட்டது. குறிப்பாக அதன் முக்கிய அடையாளமான  குவிமாடம் வழியாக நீர் கசிவைக் கண்டுள்ளது.

தாஜ்மஹால் வளாகத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இருப்பினும், இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏஎஸ்ஐ) பிரதான குவிமாடம் பாதுகாப்பாக இருப்பதாகவும், கசிவு காரணமாக நீர் வழிந்திருக்கலாம், ஆனால் குவிமாடத்தில் சேதம் ஏதும் இல்லை என்றும் உறுதியளித்துள்ளது. ட்ரோன் கேமரா மூலம் குவிமாடத்தை ASI ஆய்வு செய்துள்ளது.

தாஜ்மஹாலின் தோட்டங்களில் ஒன்று மழைக்குப் பிறகு வெள்ளத்தில் மூழ்கியதைக் காணக்கூடியதாகக் கூறப்படும் வீடியோ இணையத்தில் வைரலானது. இது சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. பல சுற்றுலா பயணிகள் தாஜ்மஹாலை பார்வையிட்டு அதன் வீடியோக்களை பதிவிட்டதாக கூறப்படுகிறது.

https://twitter.com/sumitnegi57/status/1834871833637605595

நகரத்தில் நிலவும் வானிலையால் பல வரலாற்றுத் தளங்கள் பாதிக்கப்பட்டன. மற்றொரு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான ஆக்ரா கோட்டையில் நீர் கசிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. அக்பரால் கட்டப்பட்ட வரலாற்று நகரமான ஃபதேபூர் சிக்ரி, ஜுன்ஜுன் கா கட்டோரா, ராம்பாக், சிக்கந்த்ராவில் உள்ள அக்பரின் கல்லறை, மெஹ்தாப் பாக், சினி கா ரௌசா ஆகிய இடங்களும் மழையில் சேதமடைந்தன.

Tags :
Advertisement