For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தொடர் மழை எதிரொலி | குற்றால அருவிகளில் மூன்றாவது நாளாக தொடரும் வெள்ளப்பெருக்கு!

07:18 AM Dec 19, 2023 IST | Web Editor
தொடர் மழை எதிரொலி   குற்றால அருவிகளில் மூன்றாவது நாளாக தொடரும் வெள்ளப்பெருக்கு
Advertisement

குற்றால அருவிகளில் மூன்றாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisement

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 2 தினங்களாகக் கனமழை பெய்து வந்தது. இந்த கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அனைத்து நீர் நிலைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேலும் அருவியின் நகரம் என போற்றப்படும் குற்றாலம் பேரறிவு, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்பி அருவி உள்ளிட்ட அனைத்து அருவியிலும் நீர் வரத்து அதிகரித்து வெள்ளம் ஏற்பட்டு ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

இந்நிலையில், குற்றால அருவிகளில் மூன்றாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடித்து வருகிறது. மறுபக்கம் தென்காசி மாவட்டத்தில் மழை பொழிவு தற்போது இல்லாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாகத் திரும்பி வருகிறது.

Advertisement