தொடர் கனமழை எதிரொலி | அடுத்தடுத்து கொடுக்கப்பட்ட ரெட் & மஞ்சள் ஆலர்ட்!!
நாளை(டிச.18) காலை 8.30 வரை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
குமரிக்கடல் தொடங்கி குலசேகரப்பட்டணம் வரை நிலவக்கூடிய காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
இந்நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் இடைவிடாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தை பொருத்தவரையில் மாநகர பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழையானது பதிவாகியுள்ளது. அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இடைவிடாத மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், நாளை(டிச.18) காலை 8.30 வரை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
ரெட் அலர்ட் : கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி
மஞ்சள் அலர்ட் : தஞ்சாவூர், திருவாரூர் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர்.