அரசியலமைப்பு தினம் : அரசியலமைப்பானது குடிமக்களுக்கு உரிமைகளை வழங்கி, கடமைகளை நினைவூட்டுகிறது - பிரதமர் மோடி..!
டாக்டர் அம்பேத்கர் வரைந்த அரசியலமைப்பு சட்டத்தை 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி அரசியலமைப்பு நிர்ணய சபை ஏற்றுக்கொண்டது. இதனை நினைவு கூறும் விதமாக கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 ஆம் தேதி அரசியலமைப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அரசியலமைப்பின் தலைமை சிற்பியான டாக்டர் பி.ஆர். அம்பேத்கரை கௌரவிப்பதற்கும், குடிமக்களிடையே அரசியலமைப்பு மீதான உரிமைகள் மற்றும் கடமைகளை ஊக்குவிப்பதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று ( நவம்பர் 26) பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் அரசியலமைப்பு தின கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "அரசியலமைப்பு தினத்தன்று, நமது அரசியலமைப்பை வடிவமைத்தவர்களுக்கு நாம் அஞ்சலி செலுத்துகிறோம். அவர்களின் தொலைநோக்குப் பார்வையும், தொலைநோக்குப் பார்வையும், ஒரு விசித் பாரதத்தை கட்டியெழுப்புவதில் நம்மைத் தொடர்ந்து ஊக்குவிக்கின்றன. நமது அரசியலமைப்பு மனித கண்ணியம், சமத்துவம் மற்றும் சுதந்திரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.
இது நமக்கு உரிமைகளை வழங்கும் அதே வேளையில், குடிமக்களாகிய நமது கடமைகளையும் நினைவூட்டுகிறது, அவற்றை நாம் எப்போதும் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். இந்தக் கடமைகள் ஒரு வலுவான ஜனநாயகத்தின் அடித்தளமாகும். நமது செயல்கள் மூலம் அரசியலமைப்பு மதிப்புகளை வலுப்படுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.