For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காங்கிரஸ் மாவட்ட தலைவர் சடலமாக மீட்பு | புகாருக்கு ரூபி மனோகரன் மறுப்பு!

02:01 PM May 04, 2024 IST | Web Editor
காங்கிரஸ் மாவட்ட தலைவர் சடலமாக மீட்பு   புகாருக்கு ரூபி மனோகரன் மறுப்பு
Advertisement

ஜெயக்குமார் எழுதியதாக வெளியாகியுள்ள கடிதத்தில் தனது பெயர் இடம்பெற்ற நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

2 நாட்களாக மாயமான நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமார் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்டப்பட்டதையடுத்து இந்த வழக்கு விசாரணைக்காக 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர். ரூபி மனோகரன் கூறியதாவது:

ஜெயக்குமாரின் மரணம் எனக்குத் தனிப்பட்ட இழப்பு. எ னக்கும் ஜெயக்குமாருக்கும் இடையே எந்த வரவு செலவும் நடக்கவில்லை. எ ன் மீதான புகாரில் உண்மையில்லை. அபாண்டமாகப் பழி சுமத்தப்பட்டுள்ளது என  காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர். ரூபி மனோகரன் விளக்கம் அளித்துள்ளார்.

Tags :
Advertisement