பாமகவில் முற்றும் மோதல் போக்கு - திலகபாமாவின் பதவி பறிப்பு!
பாமகவில் சமீப காலமாக அக்கட்சி நிறுவனர் ராமதாஸூக்கும், தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்தாண்டு இறுதியில் நடந்த பாமகவின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் தனது பேரன் முகுந்தனை மாநில இளைஞர் சங்கத் தலைவராக ராமதாஸ் அறிவித்தார். அப்போது மேடையிலேயே அதற்கு ஆட்சேபம் தெரிக்கும் வகையில் அன்புமணி ராமதாஸ் மைக்கை கீழே போட்டது கட்சியில் விரிசல் உருவாவதாக பேசுபொருளானது.
தொடர்ந்து ராமதாஸ், இனி நானே பாமகவுக்கு தலைவர் என்று கூறி அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கினார். இதையடுத்து சித்திரை முழுநிலவு மாநாட்டை சரிவர நடத்த முன்னேற்பாடுகள் செய்துகொண்டிருந்த நேரத்தில் மீண்டும் தன்னை பாமக தலைவர் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துக்கொண்டார்.
இதையடுத்து அண்மையில் ராமதாஸ் நடத்திய பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் குறைந்தபட்ச மா.செ-க்களே பங்கேற்றனர். இது ராமதாஸை அக்கட்சியினரே புறக்கணிப்பதாக பேசப்பட்டது. தொடர்ந்து நேற்று(மே.29) ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில், “அன்புமணிக்கு பக்குவம், தலைமை பண்பு இல்லை. 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கியது நான் செய்த தவறு. கட்சி பிரச்சினை பற்றி பேசிய தாய் மீது பாட்டிலை வீசி எறிந்தார். வளர்த்த கடா என் மார்பில் பாய்ந்துவிட்டது” என கடுமையாக அன்புமணி ராமதாஸை சாடினார்.
இதையடுத்து இன்று(மே.30) பனையூர் இல்லத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திட்டமிட்ட நிலையில், அதில் பாமக பொருளாளர் திலகபாமா பங்கேற்றதற்காக நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் அந்த பதவியில் அவருக்கு பதில் பாமக புதிய பொருளாளராக சையத் மன்சூர் நியமிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. புதிய பொருளாளராக