For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணத்திற்கு இரங்கல்! - சென்னையில் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்ட தேசியக்கொடி!

09:50 AM May 21, 2024 IST | Web Editor
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணத்திற்கு இரங்கல்    சென்னையில் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்ட தேசியக்கொடி
Advertisement

விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ்நாட்டில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடபட்டுள்ளது.

Advertisement

அசர்பைஜான் – ஈரான் இடையே பாயும் அரஸ் ஆற்றின் குறுக்கே,  இரு நாடுகளும் இணைந்து கட்டிய 3-ஆவது அணையின் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.  அந்த அணை திறப்பு விழாவிற்காக ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி நேற்று முன்தினம் அசர்பைஜான் சென்றிருந்தார்.  அந்நாட்டு பயணத்தை முடித்துவிட்டு இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் மூலம் ஈரான் திரும்பிக்கொண்டிருந்தார்.

அவருடன் ஈரான் வெளியுறவு அமைச்சா் ஹொசைன் அமிரப்டோலாஹியன்,  மாகாண ஆளுநா் மற்றும் அதிகாரிகளும் உடன் பயணித்ததாக கூறப்படுகிறது.  அப்போது,  அசர்பைஜானை ஒட்டியுள்ள ஈரானின் ஜல்பா நகரில் அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டரின் உதிரி பாகங்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டன.  இந்நிலையில், இந்த விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி  உயிரிழந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள் : தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரி முதலமாண்டு மாணவர் சேர்க்கை - மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு!

இந்நிலையில்,  விபத்து நடந்த அஜர்பைஜானை ஒட்டியுள்ள ஜல்பா நகர் மலைப்பகுதியில் இருந்து,  ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   இதனைத் தொடர்ந்து,  இப்ராஹிம் ரைசியுடன் பயணம் செய்த வெளியுறவு அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. அவரது உடல் விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் அவரது மறைவின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை வார் மொமோரியல்,  தலைமைச் செயலகம்,  சென்னை டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடபட்டுள்ளன.

Tags :
Advertisement