For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“மக்களவைத் தேர்தலில் 5 மாநிலங்களில் விசிக போட்டி” - திருமாவளவன் பேட்டி!

01:53 PM Mar 24, 2024 IST | Web Editor
“மக்களவைத் தேர்தலில் 5 மாநிலங்களில் விசிக போட்டி”   திருமாவளவன் பேட்டி
Advertisement

நாடாளுமன்றத் தேர்தலில் விசிக சார்பில் தென்னிந்தியாவில் 5 மாநிலங்களில் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னையில் இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியளித்ததாவது,

“இந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், தென்னிந்திய மாநிலங்களில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக வேட்பாளர்களை நிறுத்துகிறது. ஆந்திராவில் காங்கிரஸ் உடனான கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இன்னும் அது முடிவு செய்யப்படவில்லை. எனவே ஆந்திராவை தவிர பிற மாநிலங்களுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று (மார்ச் 24) அறிவிக்கிறோம்.

17 தெலுங்கானா தொகுதிகளில் 10 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடுகிறோம். கர்நாடகா மாநிலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆறு பேர் போட்டியிடுகிறார்கள். இவர்களும் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். கேரளா மாநிலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 5 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். திருவனந்தபுரத்தில் சித்த மருத்துவர் எஸ்.வி.வினோத் போட்டியிடுகிறார். தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 வேட்பாளர் போட்டியிடுகிறார். 4 மாநிலங்களிலும் பானை சின்னத்தில் தான் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement