For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கல்லூரி மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை - திண்டுக்கல் #RailwaytStationல் விட்டுவிட்டு கும்பல் தப்பியோட்டம்!

04:07 PM Sep 23, 2024 IST | Web Editor
கல்லூரி மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை   திண்டுக்கல்  railwaytstationல் விட்டுவிட்டு கும்பல் தப்பியோட்டம்
Advertisement

தேனியில் கல்லூரி மாணவி ஒருவரை மர்ம கும்பல் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தேனி உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கானாவிளக்கு பகுதியில் அமைந்துள்ள மருத்துவ கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரி முடிந்து அருகிலுள்ள பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நின்றுள்ளார். அப்போது, அங்குவந்த மர்ம கும்பல் மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. பின்னர் மாணவியை அங்கிருந்து அழைத்துச் சென்று, திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில், பாதுகாப்பு பணியில் இருந்த இருப்புப் பாதை காவல்துறையினரிடம் இந்த சம்பவம் குறித்து அந்தப் பெண் கூறியுள்ளார். அவரிடம் நான்கு இளைஞர்கள் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து காவலர்கள் அந்த பெண்ணை, திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து தேனி நகர காவல் நிலைய ஆய்வாளர் ராமலட்சுமி, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று, அந்தப் பெண் மற்றும் அவரது தாயிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
Advertisement