For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#CMAwards: 15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் சிறப்பு பதக்கம்!

05:03 PM Aug 14, 2024 IST | Web Editor
 cmawards  15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் சிறப்பு பதக்கம்
Advertisement

நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு பதக்கங்கள் வழங்கவுள்ளார். 

Advertisement

நாட்டின் 78-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை கோலகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் டெல்லி உட்பட, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சுதந்திர தினத்தின் போது டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவார். அதேபோல், அந்தந்த மாநிலங்களில், அம்மாநில முதலமைச்சர்கள் தேசிய கோடி ஏற்றி அம்மாநில மக்களிடையே உரையாற்றுவது வழக்கம்.

அந்த வகையில் சென்னை, கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடியை ஏற்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறகு உரை நிகழ்த்துவார். முன்னதாக தமிழ்நாடு காவல்துறையினரின் அணிவகுப்பு நடைபெறும். இதற்கான முன்னேற்பாடுகள், ஒத்திகை நிகழ்ச்சிகள் முழு வீச்சில் நடைபெற்றன. இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் விதமாக விருதுகள் வழங்கி கௌரவிப்பார். அந்த வகையில் 2024-ம் ஆண்டிற்கான சிறப்பு பதக்கங்கள் 15 காவல் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் 10 காவல் துறை அதிகாரிகள் 2024-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

1. கி.புனிதா, காவல் ஆய்வாளர் - சைபர் கிரைம் காவல் நிலையம், வேலூர் மாவட்டம்

2. து. வினோத்குமார், காவல் ஆய்வாளர் - சைபர் கிரைம் பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, சென்னை.

3. ச.சௌமியா, காவல் துணை கண்காணிப்பாளர் - மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, கடலூர் மாவட்டம்.

4. ஐ.சொர்ணவள்ளி, காவல்ஆய்வாளர் - சைபர் கிரைம் காவல் நிலையம், திருப்பூர்

5. நா. பார்வதி, காவல் ஆய்வாளர் - குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்.

6. பெ.ராதா. காவல் ஆய்வாளர் - குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, திருப்பூர்.

7. செ.புகழேந்தி கணேஷ், காவல் துணை கண்காணிப்பாளர் - செங்கல்பட்டு உட்கோட்டம், செங்கல்பட்டு மாவட்டம்.

8. இரா.தெய்வராணி, காவல் ஆய்வாளர் - பெருந்துறை காவல் வட்டம், ஈரோடு மாவட்டம்.

9. ஆ. அன்பரசி, காவல் ஆய்வாளர் - பொன்னை காவல் நிலையம், வேலூர் மாவட்டம்.

10. நா.சுரேஷ், துணை காவல் கண்காணிப்பாளர் - ஊரக உட்கோட்டம், தூத்துக்குடி.

இதே போன்று பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்கண்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2024- ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படும்.

1. தா.ச. அன்பு. இ.கா.ப., காவல் துறை தலைவர் - குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுதுறை, சென்னை.

2. இ.கார்த்திக், இ.க.பா., காவல் கண்காணிப்பாளர்-I - தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை, சென்னை.

3. சி.ர.பூபதிராஜன், துணைக் காவல் கண்காணிப்பாளர் - தனிப்பிரிவு குற்றப்பபுலனாய்வுத் துறை, சேலம் சரகம்.

4. க.சீனிவாசன், காவல் ஆய்வாளர் (தொ.நு.) - காவல் தொலைத்தொடர்பு பிரிவு, சென்னை.

5. பு.வ. முபைதுல்லாஹ், காவல் உதவி ஆய்வாளர் - உள்வட்ட பாதுகாப்பு பிரிவு, அயல்பணி திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு, தலைமையகம், சென்னை.

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். மேற்கண்ட விருதுகள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement