For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வடசென்னை வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் #MKStalin ஆய்வு!

வடசென்னை வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
10:56 AM Jan 31, 2025 IST | Web Editor
வடசென்னை வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர்  mkstalin ஆய்வு
Advertisement

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் வீட்டுவசதி, நகராட்சி நிர்வாகம், எரிசக்தி, மருத்துவம், உள்துறை சார்பில் 2-ம் கட்டமாக ரூ.1,383 கோடியில் 79 புதிய திட்டப் பணிகள் தொடக்கம் மற்றும் 29 முடிவுற்ற பணிகள் திறந்து வைக்கும் நிகழ்ச்சி, வால்டாக்ஸ் சாலை தண்ணீர் தொட்டி தெருவில் கடந்த டிச.4ம் தேதி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, திட்டப் பணிகளை தொடங்கி வைத்ததுடன், முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

Advertisement

தொடர்ந்து, வடசென்னை வளர்ச்சி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  சமீபத்தில் திருவொற்றியூர், ராயபுரம், ஆர்.கே., நகர், துறைமுகம், வால்டாக்ஸ் சாலை ஆகிய பகுதிகளில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சி.எம்.டி.ஏ., மேற்கொண்டுள்ள பணிகளை, அமைச்சர் சேகர்பாபு, கூடுதல் தலைமை செயலர் காகர்லா உஷா, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அன்சுல் மிஷ்ரா, சி.இ.ஓ., சிவஞானம், மேயர் பிரியா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகளை வாரத்திற்கு 3 நாட்கள் ஆய்வு செய்து வருவதாகவும், பணிகள் ஜெட் வேகத்தில் நடந்த வருவதாகவும் தெரிவித்தார்.  மேலும், வால்டாக்ஸ் சாலையில், 700 குடியிருப்புகள் கட்டும் பணி, இந்தாண்டு இறுதிக்குள் முடிவடையும் எனவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், கொளத்தூர் பகுதியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை முதலமைச்சர் மு..ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். முதலமைச்சர் மு..ஸ்டாலின் திரு.வி.க. நகர் கன்னிகாபுரம் விளையாட்டு மைதான பணிகளை நேரில் பார்வையிட்டார். அப்போது அவருடன் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags :
Advertisement