தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட செல்வப்பெருந்தகைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதம் அறிவிப்படவுள்ள சூழ்நிலையில், தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகள் தங்களது பணிகளை தொடங்கிவிட்டது. கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி திமுகவுடன் தனது முதல் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடித்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்கப்படவுள்ளது.
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் @INCTamilNadu-இன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர் திரு. @SPK_TNCC அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சிறப்பாக வழிநடத்தி வெற்றிகள் பல குவித்திட்ட அருமை நண்பர்…
— M.K.Stalin (@mkstalin) February 17, 2024
இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.