For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘ஏனோ வானிலை மாறுதே’… 3 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை... எங்கெல்லாம் தெரியுமா?

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
07:24 AM Apr 28, 2025 IST | Web Editor
‘ஏனோ வானிலை மாறுதே’… 3 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை    எங்கெல்லாம் தெரியுமா
Advertisement

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக மே 5ம் தேதி தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

Advertisement

இதையும் படியுங்கள் : ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் | காசாவில் 52 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு எண்ணிக்கை!

சென்னையை பொருத்தவரை இன்று (ஏப்.28) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement