For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் #MKStalin! நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார்!

05:13 PM Sep 26, 2024 IST | Web Editor
டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர்  mkstalin  நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார்
Advertisement

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்ட நிலையில், நாளை (27.09.2024) காலை பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார். அப்போது சென்னை மெட்ரோ ரயிலின் 2ஆம் கட்ட திட்டப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு ‘சமக்ரா சிக்ஷா அபியான்’ என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகத்திற்கான வரி நிலுவைகள், கடந்த ஆண்டு தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதி வழங்கவும் கோரிக்கை வைக்க உள்ளதாவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பின் போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் முதல்வரின் இந்த பயணத்தின் போது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேச உள்ளார். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு நாளை இரவு 8 மணிக்குச் சென்னை திரும்புகிறார்.

Tags :
Advertisement