For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“யுஜிசி நெட் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பது சரியான முடிவு” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!

யுஜிசி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்
01:56 PM Jan 14, 2025 IST | Web Editor
“யுஜிசி நெட் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பது சரியான முடிவு”   முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிக்கை
Advertisement

தேசிய தேர்வு முகமையினால் நடத்தப்படும் யுஜிசி நெட் தேர்வுகள் ஜனவரி 3-ம் தேதி முதல் ஜனவரி 16-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தினங்களில் தமிழ்நாட்டில் பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்படுவதாலும், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மகர சங்கராந்தி பண்டிகையாக கொண்டாடப்படுவதாலும் தேர்வுக்கான தேதியை மாற்றக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்தனர்.

Advertisement

அதன் விளைவாக, 15 தேதி நடைபெறவிருந்த நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான மறுதேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தது. மேலும், ஜனவரி 16-ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் யுஜிசி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “யுஜிசி தேர்வுகளை வேறொரு நாளுக்கு மாற்றிட வேண்டும் என்று ஒன்றிய கல்வி அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தேன். தற்போது அத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பது சரியான முடிவு. தமிழ்ப் பண்பாட்டுத் திருநாட்களின்போது முக்கியத் தேர்வுகள் நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவிப்பதும், மாநில அரசின் தலையீட்டுக்குப் பின்னர் அது ஒத்திவைக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. இனியாவது நாட்டில் செயல்படும் எந்தவொரு அமைப்பும். நமது நாட்டின் பன்முகத்தன்மையையும் இங்கு வாழும் அனைத்துத் தரப்பு மக்களின் உணர்வுகளையும் மதித்து முடிவுகளை எடுப்பார்கள் என நம்புவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement