பத்ம விருதுக்கு தேர்வானவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து !
இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் விருதுகளை 139 பேருக்கு மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் அஜித்குமார், கிரிக்கெட் வீரர் அஸ்வின், சமையல் கலைஞர் தாமு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். தொடர்ந்து பத்ம விருது பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் அஜித்குமார் உள்ளிட்ட பத்ம விருது பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "தமிழ்நாட்டில் இருந்து பத்ம பூஷண் விருதுக்குத் தேர்வாகியுள்ள நடிகர் அஜித்குமார், நல்லி குப்புசாமி, ஷோபனா சந்திரகுமார் ஆகியோருக்கும், பத்ம ஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியிருக்கும் அஸ்வின், குருவாயூர் துரை, தாமோதரன், லட்சுமிபதி ராமசுப்பையர், எ.டி.ஸ்ரீனிவாஸ், புரிசை கண்ணப்ப சம்பந்தன், ஆர்.ஜி. சந்திரமோகன், ராதாகிருஷ்ணன் ,தேவசேனாபதி, சீனி.விஸ்வநாதன், வேலு ஆசான் ஆகியோருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசின் #PadmaBhushan விருதுக்குத் தேர்வாகியுள்ள நடிகர் திரு. அஜீத்குமார், திரு. நல்லி குப்புசாமி, திருமிகு ஷோபனா சந்திரகுமார் ஆகிய மூவருக்கும்; #PadmaShri விருதுக்குத் தேர்வாகியிருக்கும் திரு. @ashwinravi99, திரு. குருவாயூர் துரை, திரு. தாமோதரன்,…
— M.K.Stalin (@mkstalin) January 25, 2025
தத்தமது துறைகளில் தாங்கள் மென்மேலும் உயரங்களை அடையவேண்டும், தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கவேண்டும் என வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.