For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னை | பேருந்தில் கைப்பையிலிருந்து ரூ.1 லட்சம் திருட்டு... கண்ணீர் விட்டு கதறி அழுத பெண்!

10:09 AM Jul 23, 2024 IST | Web Editor
சென்னை   பேருந்தில் கைப்பையிலிருந்து ரூ 1 லட்சம் திருட்டு    கண்ணீர் விட்டு கதறி அழுத பெண்
Advertisement

பேருந்தில் பயணித்த பெண்ணின் கைப் பையிலிருந்து ரூ.1 லட்சம் திருட்டு போன நிலையில் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement

சென்னை திருவொற்றியூர் மல்லிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி.  இவர்
எலெக்ட்ரிக் வேலை செய்து வருகிறார்.  இவருடைய மனைவி அமுலு.  இவர் வாங்கிய கடனை அடைக்க வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 லட்சத்தை வட்டிக்கு வாங்கியுள்ளார்.  அமுலு, ராயபுரம் MC ரோட்டில் இருந்து தடம் எண் 56A என்ற மாநகரப் பேருந்தில் ஏறி திருவொற்றியூர் ராஜா கடை அருகே வந்து இறங்கியபோது கைப்பையில் வைத்திருந்த ரூ.1 லட்சம் மாயமானது தெரியவந்தது.

இதனை அறிந்த அமுலு கண்ணீர் விட்டு கதறி அழுதார்.  உடனே மாநகர பேருந்து நிறுத்தப்பட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த திருவெற்றியூர் காவல்துறையினர் பெண் காவலர் உதவியுடன் பேருந்தில் இருந்த பெண் பயணிகளிடம் சோதனை செய்தனர்.

அமலு அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகே அமர்ந்திருந்த பெண் தான் பணத்தை திருடி சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  அவர் அருகில் அமர்ந்திருந்த பெண் ராஜா கடை பேருந்து நிலையத்தில் இறங்கியதாக தெரிகிறது.  போலீசார் பேருந்து நிறுத்தத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து வருகின்றனர்.

Tags :
Advertisement