For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பருவமழையை சவாலாக எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார்” - மேயர் பிரியா பேட்டி!

பருவமழையை சவாலாக எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் என மேயர் பிரியா பேட்டியளித்துள்ளார்.
03:39 PM Jun 21, 2025 IST | Web Editor
பருவமழையை சவாலாக எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் என மேயர் பிரியா பேட்டியளித்துள்ளார்.
“பருவமழையை சவாலாக எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார்”    மேயர் பிரியா பேட்டி
Advertisement

சென்னை பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் கந்தல் சேகரிப்பாளர் புதுவாழ்வு சிறப்பு முகாம் ( Rag Pickers Rehabilitation Special Camp ) மற்றும் அரசாங்க நலத்திட்டங்களின் அடிப்படையில் புதிய வாழ்வாதாரங்களை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கலந்து கொண்டு
பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் ஒரு சில கந்தல்
சேகரிப்பு பணியாளர்களுக்கு கலைஞர் காப்பீடு அட்டைகளை மேயர் பிரியா வழங்கினார்.

Advertisement

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “ முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தல்படி சென்னை மாநகராட்சியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பெருங்குடி குப்பை கொட்டும்
வளாகத்தில் உள்ள கந்தல் சேகரிப்பாளர் பணியாளர்களுக்கு இன்று மாநகராட்சி மூலமாக மருத்துவ முகாம்களும், தமிழ்நாடு அரசு சார்பாக வழங்கக்கூடிய சேவை முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு சில மாதங்களுக்கு முன்னதாக கொடூங்கையூரில் உள்ள குப்பை கொட்டும்
வளாகத்தில் உள்ள கந்தல் சேகரிப்பு பணியாளர்களுக்கு இந்த திட்டம்
தொடங்கப்பட்டது. அப்போது கொடூங்கையூரில் உள்ள 200 கந்தல் சேகரிப்பு
பணியாளர்கள் பயன் அடைந்தார்கள் என தெரிவித்தார். கந்தல் சேகரிப்பாளர்கள் தொடர்ந்து குப்பை கொட்டும் இடங்களில் வேலை செய்யவதால்
அவர்களுக்கு பல்வேறு உடல் சார்ந்த பிரச்சனைகள் வருகிறது. குறிப்பாக தோல்
பிரச்சனை, சுவாசப்பிரச்சனைகள் ஏற்படுகிறது. அனைவரும் இந்த மருத்துவ முகாம்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என கூறினார்.

கந்தல் சேகரிப்பு பணியாளர்களுக்கு ஆதார் கார்டு மற்றும் கலைஞர் காப்பீடு அட்டை இல்லாமல் உள்ளது. அவர்களுக்கு இதனை பெறுவதற்கு எங்கே சென்று அணுகுவது என்று  தெரியவில்லை. அது குறித்தும் இங்கு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. கந்தல் சேகரிப்பாளர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் உள்ளனர். அவர்களை சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இணைக்க கேட்டுள்ளோம்.

கந்தல் சேகரிப்பு பணியாளர்களை பொருத்தவரை கொடூங்கையூர் மற்றும் பெருங்குடியில் தான் அதிகம் உள்ளனர். இதுவரை அவர்களுக்கு தனியாக அங்கீகாரம் இல்லாத சூழல் இருந்தது. கொடூங்கையூரில் 200 நபர்கள் இருக்கிறார்கள். பெருங்குடியில் 147 நபர்கள் இருக்கிறார்கள். இதுபோல் அவர்களுக்கு முகாம்கள் நடைபெறும் போது அதிக அளவு விழிப்புணர்வு அவர்களுக்கு ஏற்படும். எத்தனை நபர்கள் இருக்கிறார்கள் என கணக்கீடு நடத்தப்படும்.

சென்னையில் பல்வேறு இடங்களில் கடந்த 2 ஆண்டுகளாக மழை நீர் வடிகால்வாய் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தாண்டை பொருத்தவரை தற்போதை மழைக்காக தயாராக இருக்கிறோம். அதற்கான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகிறோம். முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மழை நீர் வடிகால்வாய் பணிகள் குறித்து தொடர்ந்து ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். வரக்கூடிய மழையை சவாலாக
சந்திக்க சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது” எனத் தெரிவித்தார்.

Tags :
Advertisement