For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கஞ்சா கடத்தியதாக வழக்கு - ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் சவுக்கு சங்கர்!

11:38 AM May 30, 2024 IST | Web Editor
கஞ்சா கடத்தியதாக வழக்கு   ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் சவுக்கு சங்கர்
Advertisement

கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரியிருந்த சவுக்கு சங்கர் தனது ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றார். 

Advertisement

யூ டியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள்,  பெண் போலீசார் குறித்து
அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4-ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  அந்த கைது நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் ராம்பிரபு,  ராஜரத்தினம் மற்றும் கஞ்சா கொடுத்ததாக மகேந்திரன் என்பவர் மீதும் தேனி பழனி செட்டிபட்டி போலீஸார் வழக்கு பதிந்தனர்.

இதனையடுத்து கஞ்சா வழக்குக்காக மே. 7 ஆம் தேதி கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர்,  மறுநாள் (மே.8) மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தநிலையில், இந்த மனுவை அவர் இன்று திரும்ப பெற்றுக் கொண்டார்.

Tags :
Advertisement