இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
05:05 PM Jul 22, 2025 IST | Web Editor
Advertisement
தெற்கு ஒடிசா, மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகின்றன. இதன் காரணமாக இன்று முதல் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
Advertisement
மேலும் இன்று, நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, தேனி, தென்காசி, மதுரை, கோவை, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.