For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னையில் ஒரு மணிநேரத்தில் 8 இடங்களில் செயின் பறிப்பு!

சென்னையில் காலை 6 மணிக்கு தொடங்கி 7 மணிக்குள் 8 இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.
09:30 AM Mar 25, 2025 IST | Web Editor
சென்னையில் ஒரு மணிநேரத்தில் 8 இடங்களில் செயின் பறிப்பு
Advertisement

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசும், காவல்துறையும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் சென்னையில் இன்று காலை 6 மணிக்கு தொடங்கி 7 மணிக்குள் திருவான்மியூர், பெசன்ட் நகர், சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரியில் என அடுத்தடுத்து 8 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து காவல் நிலையங்களில் அளித்த புகாரின் அடிப்படையில் சுமார் 20 சவரனுக்கு அதிகமான தங்க நகைகள் பறித்து செல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

புகாரைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்பையில் போலீசார்  விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
Advertisement