For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நாளை தொடக்கம்!

09:39 PM Feb 14, 2024 IST | Web Editor
சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நாளை தொடக்கம்
Advertisement

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது.

Advertisement

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு நாளை (பிப்.15) தொடங்குகிறது.  10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை தொடங்க இருக்கிற தேர்வு மார்ச் 13-ம் தேதி நிறைவடைகிறது.  அதேபோல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2-ம் தேதி நிறைவடைகிறது.

இந்த தேர்வினை 36 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.  இந்த தேர்விற்காக நாடு முழுவதும் 877 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த தேர்வு காலை 10:30 மணிக்கு தொடங்கி மதியம் 1. 30 மணிக்கு நிறைவடையும்.

குறிப்பாக டெல்லி பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருவதால், டெல்லியை சுற்றி இருக்கும் மாணவர்கள் மட்டும் காலை 10 மணிக்குள்ளாகவே தேர்வு மையங்களுக்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement