For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஜெயலலிதா சிகிச்சை கால சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரி வழக்கு - தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!

12:04 PM Jul 15, 2024 IST | Web Editor
ஜெயலலிதா சிகிச்சை கால சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரி வழக்கு   தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு
Advertisement

சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி இரவு 10.25 மணிக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்களில் நிறைய முரண்பாடுகள் இருப்பதால் உயர்
நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்
என, திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர்
நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், நிர்பந்தங்கள் காரணமாக ஜெயலலிதா உடல்நிலை குறித்து பொய் அறிக்கைகள் வெளியிடப்பட்டன. மருத்துவமனையில் கண்காணிப்புக் கேமராக்கள்
அகற்றபட்டதாகவும் அப்பலோ மருத்துவமனைத் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி
தெரிவித்திருந்தார். யார் நிர்ப்பந்தம் செய்தது என்று அவர் கூறவில்லை.

மருத்துவமனையில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்ட காலகட்டத்தில் ஜெயலலிதா, காவிரி நதிநீர் பங்கீடு சம்பந்தமாக அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடந்தியதாகவும்,
அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்ததாகவும் அறிவிப்பு வெளியானது. இது எவ்வாறு சாத்தியமானது?.

ஜெயலலிதா கவனித்து வந்த துறைகளை ஒ. பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்து, ஜெயலலிதா கையெழுத்திட்ட பரிந்துரை கடிதம் வெளியிடப்படவில்லை. தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின் போது, தேர்தல் படிவங்களில் மயக்க நிலையில் இருந்த ஜெயலலிதாவின் கைரேகையை வாங்க வேண்டும் என்ற முடிவு எடுத்தவர் யார்? என்ற
விவரம் தெரிவிக்கப்படவில்லை. 2016 டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு ஏழு மணிக்கே எதற்காக, யார் சொல்லி அதிமுக அலுவலகத்தில் புது முதலமைச்சரை தேர்வு செய்ய கூடினார்கள் என்பதை தெரிவிக்கவில்லை.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்கள் 7 ஆண்டுகளுக்கு மேல் நீடிப்பதால்
இதுகுறித்து சிபிஐ விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்கள் குறித்து புலன் விசாரணை நடத்த வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்த போதும், அந்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஜெயலலிதா மரணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் முன்பே அவரது உடலை
எம்பால்மிங் செய்வது தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்
சாட்டப்பட்டது. இதையடுத்து இந்த மனுவுக்கு இரு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.

Tags :
Advertisement