For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாலியல் புகாரில் வழக்குப்பதிவு - #MukeshMLA தலைமுறைவு!

10:05 AM Aug 29, 2024 IST | Web Editor
பாலியல் புகாரில் வழக்குப்பதிவு    mukeshmla தலைமுறைவு
Advertisement

பாலியல் புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நடிகரும் கொல்லம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான முகேஷ் தலைமுறைவாகியுள்ளது தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

கேரளத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டனர். அதைத் தொடர்ந்து மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது. கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கையை மாநில அரசு வெளியிடாமல் இருந்தது.

இதனைத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அறிக்கையின் அதிர்ச்சியூட்டும் விவரங்கள் கடந்த 19-ம் தேதி வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள திரையுலகை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரிடமும் இந்த அறிக்கை பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கேரள உயர்நீதிமன்றமும் அறிக்கையை சமர்பிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகை ரேவதி சம்பத் என்பவர் நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்முறை செய்ததாக  குற்றம் சாட்டினார்.

இது பலரிடமும் அதிர்ச்சியை உண்டாக்கியதை தொடர்ந்து பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா என்பவர் பிரபல மலையாள இயக்குநர் ரஞ்சித், சினிமா விவாதத்திற்காகத் தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றம்சாட்டினார். இதன் பின்னர் மலையாள நடிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நடிகர் சித்திக் ராஜிநாமா செய்தார். அதேபோல், கேரள கலாசித்ரா அகாடமியின் தலைவர் பொறுப்பிலிருந்தும் இயக்குநர் ரஞ்சித் விலகினார்.

இதற்கு நடுவில் நடிகைகள் ஒவ்வொருவராக, நடிகர்கள் தங்களுக்கு தந்த பாலியல் தொல்லைகளை அம்பலப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், மணியம்பிள்ளை ராஜூ, நடிகர் இடவேள பாபு ஆகியோர் மீது நடிகை மினு முனீர் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.

மலையாள திரையுலகில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக கிளம்பியதால் மலையாள நடிகர்கள் சங்க அவசர செயற்குழு கூட்டம் கொச்சியில் நடந்தது. இதில், தலைவர் பதவியை நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்தார். அத்துடன், செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்டாக ராஜினாமா செய்தனர்.

இதன் பின்னர் விசாரணைக் குழுவில் நடிகைகள் அளித்த புகாரின்  அடிப்படையில் நடிகர் சித்திக் , இயக்குனர் ரஞ்சித், நடிகர் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட 7 பேர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தனர். இதன் ஒருபகுதியாக நடிகரும் எம்எல்ஏவுமான முகேஷ் மீது கொச்சி மரடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  இந்த இந்த நிலையில் நடிகர் முகேஷ் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement